உத்தரகாண்ட் முதல்வர் யார்.. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க டேராடூன் விரையும் மத்திய அமைச்சர்கள்!
டேராடூன்: நடந்து முடிந்துள்ள உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுன்ட வெற்றி பெற்றது. ஆனாலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் தோல்வியடைந்தார். இதையடுத்து முதல்வரை தேர்வு செய்ய பாஜக மூத்த தலைவர்கள் உத்தரகாண்ட் செல்லவுள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் என ஐந்து மாநிலத்துக்கும் தேர்தல் நடந்துமுடிந்து, புதிய அரசுகள் பதவியேற்க உள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும், மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜகவும் ஆட்சியைப் பிடித்தன. உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

உத்தரகாண்ட்
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், பாஜக 49 இடத்திலும், காங்கிரஸ் 19 இடத்திலும் வெற்றி பெற்றன. பாஜக பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளராக புஷ்கர் சிங் தாமி அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினார். இதனா உத்தரகாண்டில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் யார்?
புஷ்கர் சிங் தாமி இந்த தேர்தலில் தோற்றாலும், அவரையே மீண்டும் முதல்வராக்கும் திட்டத்தை பாஜக யோசிப்பதாகவும், ஆனால் கடந்த காலங்களில் அவரின் பங்களிப்பு சிறப்பாக இல்லை என்று பாஜக தலைமைக்கு சில கருத்துகள் சென்றதால், அவருக்கு எதிராக முதல்வர் பதவிக்கு பலரது பெயரும் அடிபட்டுவருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல்
கடந்த பாஜக ஆட்சியில், மூன்று முறை முதல்வர்களை மாற்றியது பாஜக. திரிவேந்திர சிங் ராவத், தீரத் சிங் ராவத், புஷ்கர் சிங் தாமி என மூன்று முதல்வர்களை கண்டது உத்தரகாண்ட். அதனால் வலுவாலன் ஒரு தலைவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரியவருகிறது.

மத்திய அமைச்சர்கள்
உத்தரகாண்ட் மாநில முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் விரைவில் உத்தரகாண்ட் செல்லவுள்ளனர். புஷ்கர் சிங் தாமி தன்னுடைய வலுவான தொகுதியிலேயே காங்கிரஸ் கட்சியிடம் தோற்றிருப்பதால் அவரை மீண்டும் தேர்வு செய்ய பாஜக யோசிக்கிறது. ஆனால் நாட்டுப்பற்று, மோடிக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தால் மீண்டும் அவரை தேர்வு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications