ஜார்க்கண்டில் பாஜக தோற்க ஒரே காரணம்.. இதுவே முழு காரணம்.. இது நடந்திருந்தா கதையே வேற.. ரிப்போர்ட்
ராஞ்சி: ஜார்க்கண்டில் பாஜக எஜேஎஸ்யூ கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் இந்நேரம் அந்த கூட்டணிக்கு மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 40 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்று பகுப்பாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் பெற்ற ஓட்டுகள், வாக்கு சதவீதம் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
81 தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக தனியாகவும், ஏஜெஎஸ்யு தனியாகவும், காங்கிரஸ், ஜேஎம்எம், ஆர்ஜேடி ஆகியவை இணைந்து ஒரு கூட்டணியாகவும் போட்டியிட்டன.

பாஜக 25 இடம்
இதில் காங்கிரஸ், ஜேஎம்எம், ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதேநேரம் பாஜக 25 இடங்களிலும், ஏ.ஜே.எஸ்.யு கட்சி உள்பட மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கூட்டணி
உண்மையில் இந்த தேர்தலில் பாஜகவும் ஏ.ஜே.எஸ்.யு கட்சியும் தனித்தனியாக அல்லாமல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால், அவர்கள் இந்நேரம் பெரும்பான்மைக்கு நெருங்கி இருப்பார்கள். அதாவது 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் 40 இடங்களை வென்று இருப்பார்கள். அதேநேரம் காங்கிரஸ் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி 34 இடங்களையே பிடித்திருக்கும், இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்திருப்பதற்காக சூழல் ஏற்பட்டு இருக்கும் என்கிறது வாக்கு சதவீத ஆய்வு நிலவரங்கள்.

வாக்கு சதவீதம்
இந்த தேர்தலில் பா.ஜ.க-ஏ.ஜே.எஸ்.யு கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 41.5%, ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கட்சிக்கு 35.4% மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் ஆறு சதவீதம் அதிகமாக உள்ளது. இதன்படி பார்த்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 81 இடங்களிலும் பா.ஜ.க-ஏ.ஜே.எஸ்.யு கட்சிகள் தனித்தனியாக நின்றதால் இதற்க வாய்ப்பு இல்லாமல் போனது.

தோற்க இதுவே காரணம்
பா.ஜ.கவின் வெற்றிக்கான வாக்குகளை ஏ.ஜே.எஸ்.யு கட்சி பல இடங்களில் பிரித்திருக்கிறது. அப்படி நடக்காமல் இருந்திருந்தால் பாஜக கூடுதலாக 9 இடங்களையும் ஏ.ஜே.எஸ்.யு கட்சி கூடுதலாக 4 இடத்தை வென்றிருக்கும். இதன் மூலம் பாஜக (25+9) 34 இடங்களையும், ஏ.ஜே.எஸ்.யு கட்சி (2+4) 6 இடங்களையும் பெற்று இருக்கும் இதன் மூலம் இரு கட்சிகளும் இணைந்து மொத்தம் உள்ள 81 இடங்களில் 40 இடங்களை பிடித்திருக்கலாம். இதன் மூலம் பிற கட்சிகளின் உதவியுடன் பாஜக ஆட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால் இருவரும் பிரிந்ததே பாஜக ஜார்க்கண்டில் தோற்க காரணமாக அமைந்துள்ளதாக வாக்கு சதவீத ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications