குஜராத் தேர்தல் முடிந்த பிறகு.. தாமதமாக டிச. 15ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
டெல்லி: டிசம்பர் 15 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. ஜனவரி 5ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்க உள்ளது
குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்றம் கூடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
வழக்கமாக குளிக்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 2வது வாரத்திற்கு பிறகு தொடங்கி ஒரு மாத காலம் நடக்கும். இம்முறை குஜராத்தில் டிச. 9 மற்றும் 14ம் தேதிகளில் சட்டசபை வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பாஜகவுக்காக பிரசாரத்தில் பங்கேற்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திப்போட அரசு முயல்கிறது, இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில தினங்கள் முன்பு கண்டனம் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications