இடம் இல்ல அதான் தரையில படுக்க வச்சோம்... ஆபரேஷன் செய்த பெண்களை உதாசினப்படுத்திய மருத்துவமனை
மத்திய பிரதேச மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு இடம் இல்லாததால் ஆபரேஷன் செய்யப்பட்ட பெண்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
Recommended Video

போபால்: மத்திய பிரதேச மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு இடம் இல்லாததால் ஆபரேஷன் செய்யப்பட்ட பெண்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் முப்பதுக்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் இந்த பெண்களில் சில பேர் முக்கியமான ஆபரேஷன்கள் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் மிகவும் திமிராக வேறு பதில் அளித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் செயலுக்கு மத்திய பிரதேச சுகாதாரத்துறை கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

தரையில் படுக்க வைக்கப்பட்டனர்
போபாலில் சாட்னா நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் நேற்று மோசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். மேலும் வெளியே வரண்டாவில் அவர்கள் வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் பெட் கேட்டதற்கு அந்த மருத்துவமனை தரையில் விரிக்கும் தார் பாயை கொடுத்து இருக்கிறது.

ஆபரேஷன் செய்த பெண்கள்
இந்த கொடுமையான செயல் காரணமாக 30 பெண்கள் தரையில் படுத்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் யாருக்கும் போற்றிக் கொள்ள கூட போர்வை தரப்படவில்லை. தரைவிரிக்கும் தார் பாயை போர்வையாக பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் குழந்தை பெற்ற பெண்களும் அடங்கி இருந்தனர். மேலும் அங்கு இருந்த சில பெண்களுக்கு முதல்நாள் தான் பெரிய அளவில் ஆபரேஷன் நடந்து இருக்கிறது.

திமிரான நிர்வாகம்
இந்த பிரச்சனை வெளியே தெரிந்த போதும் கூட அந்த மருத்துவமனை நிர்வாகம் சுதாரிக்காமல் இருந்திருக்கிறது. இது குறித்து கேட்கும் போது ''நாங்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது படுப்பதற்கு பெட்டோ, அறையோ இல்லை. அதனால்தான் அனைவரும் தரையில் படுக்க வைக்கப்பட்டனர்'' என திமிராக பதில் அளித்து இருக்கிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா
தற்போது இந்த பிரச்சனை மத்திய பிரதேச சுகாதார துறைக்கு தெரிய வந்து இருக்கிறது. அந்த மருத்துவமனைக்கு கடும் கண்டனம் விடுத்து இருக்கிறது. விரைவில் அனைத்து மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமாம். அங்கு இருக்கும் பற்றாக்குறையை போக்கும் வகையில் விரைவில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் சுகாதாரத்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications