இது கதையல்ல நிஜம்...ஐ.ஏ.எஸ் கனவுடன் ஆட்டோ ஓட்டும் இளம்பெண் !
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டும் 22 வயது இளம்பெண் எல்லம்மா ஐ.ஏ.எஸ் லட்சியக் கனவுடன் தீவிரமாக தயாராகி வருகிறார்.
வறுமை, குடும்பச் சூழ்நிலை காரணமாக 18 வயதில் ஒரு பூ வியபாரியை திருமணம் செய்தார். காலம் செய்த கோலத்தால், கணவரின்றி, இரண்டரை வயது கைக்குழந்தையுடன் தவித்த எல்லம்மா, மைத்துனரின் உதவியுடன் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டார். மன தைரியத்துடன் வாழ வேண்டுமென்ற உறுதியுடன் இருந்த இவர், ஆட்டோ வாங்க வசதியின்றி, நாள் வாடகைக்கு ஆட்டோவை பெற முயன்றார்.

பெண் என்பதால், அவருக்கு ஆட்டோவை வாடகைக்கு தர மறுத்தனர். இருப்பினும் விடா முயற்சியுடன் போராடி கடைசியில், ஒரு ஆட்டோ மெக்கானிக்கிடம் நாளொன்றுக்கு ரூ.130 வாடகையில் ஆட்டோ எடுத்துள்ளார் எல்லம்மா.
பரபரப்பான பெங்களூரு நகரச் சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆட்டோ ஓட்டும் இவர், ஓய்வு நேரங்களில் விடாமல் படித்துக் கொண்டே இருந்துள்ளார். ஒரே நேரத்தில், பி.யு.சி., தேர்வுக்கும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கும் தயாராகி வருகிறார். ஆட்டோ சவாரி முடிந்து, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான புத்தகங்களை படித்து வருகிறார்.
இதுகுறித்து எல்லம்மா கூறுகையில், பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே ஐஏஎஸ் படித்து வெற்றி பெற வேண்டும் என்று வைராக்கியமாக கூறினார். மேலும் ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்கள் நல்ல முறையில் நடந்து கொள்கின்றனர். எனது கதையை கேட்கும் அவர்கள் மீட்டருக்கு மேல் ரூ.10 அல்லது ரூ.20 கொடுப்பார்கள் என்றார் எல்லம்மா. விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும் எல்லம்மாளின் ஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்பட வேண்டும்.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications