இங்கிலாந்து மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் தாக்குதல்-பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மான்செஸ்டர்: இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியான தகவலின் படி இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் உள்ள விக்டோரியா ரயில் நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
broken.
— Ariana Grande (@ArianaGrande) May 23, 2017
from the bottom of my heart, i am so so sorry. i don't have words.