"கோழிக்கறி" சாப்பிடாதீங்க.. கிலோ 700 ரூபாயாம்.. அய்யோ, கோதுமை மாவு அதுக்கு மேல.. எங்கேன்னு பாருங்க
பாகிஸ்தான் நாட்டில் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது
இஸ்லாமாபாத்: ஒரு கிலோ கோதுமை மாவு, கிலோ 160 ரூபாயாம்.. ஒரு கிலோ சிக்கன் 700 ரூபாயாம்.. பாகிஸ்தான் நாட்டில் இப்படியெல்லாம் விலை கடுமையாக உயர்ந்து கிலியை தந்து வருகிறது.
இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது..
அதனால்தான், உணவு பொருட்களின் விலை உச்சத்துக்கும் எகிறி வருகிறது.. ஒவ்வொரு உணவு பொருட்களின் விலை உயர்வையும் மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்..

கோழி முட்டை
காரணம், பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவு கோதுமையாகும்.. ஆனால், அந்த கோதுமை மாவின் விலை உயர்ந்துவிட்டதால் கடுமையான அதிருப்தியில் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.. கராச்சியில், ஒரு கிலோ கோதுமை மாவு ருபாய் 140 முதல் 160 வரை விற்கப்படுகிறதாம்.. மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் கூறுகிறார்கள்.. அதனால்தான், நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கமே வழங்கி வருகிறது..

கோழிக்கறி
இந்த லிஸ்ட்டில் தற்போது கோழிக்கறியும் சேர்ந்து கொண்டுவிட்டது.. கோழியின் விலையில் 82.5 சதவீத உயர்வையும், முட்டையின் விலை 50 சதவீதம் வெங்காயத்தின் விலை 415 சதவீதம் சமீபத்தில் உயர்ந்துள்ளது.. இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் சிக்கன் விலை கிலோவுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது... சில நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ சிக்கன் ரூ.440-480 ஆக இருந்தது.. ஆனால், இப்போது ஒரு கிலோ ரூ.650-700 ஆக உள்ளது.

கோழி தானியம்
சிக்கன் விலை உயர்வுக்கு காரணம் அரசாங்கம்தான் என்கிறார்கள்.. இதுகுறித்து கோழிப்பண்ணை வியாபாரிகள் சொல்லும்போது, கோழிகளுக்கு தீவனம் சரியாக வழங்க முடியாத அளவிற்கு தீவனங்கள் விலை அதிகரித்துள்ளது.. சந்தையில் கோழிகளின் வரத்து பெரிதும் குறைந்து விட்டது.. அதே நேரத்தில் தேவையும் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், 1500 முதல் 1800 ரூபாய் வரை கிடைத்த, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை கோழி தானியம், தற்போது, 4,000 ரூபாய் வரை விலை போகிறது. அதோடு, போக்குவரத்து செலவும் அதிகரித்து, கடைசியில் கோழிக்கறி விலை உயரும் வரை வந்துவிட்டது என்கிறார்கள்.

சிக்கன் வேணாம்
கோழிக்கறி விலை உயர்ந்துள்ள நிலையில், சிக்கன் யாரும் சாப்பிடாதீங்க, அது உடல் நலத்துக்கு நல்லது கிடையாது என்று மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரிக் பஷீர் சீமா கருத்து தெரிவித்து, சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. இதைக்கேட்டு அசைவப் பிரியர்கள் ஒருபக்கம் டென்ஷனாகி உள்ளனர் என்றாலும், பாகிஸ்தான் கோழிப்பண்ணை சங்கத்தினர் கொந்தளித்து போய்விட்டனர்.. சிக்கன் விலை இன்னும் உயரும் என்றும் சொல்கிறார்கள்.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications