சீனா: ஜின்ஜியாங்’ தீவிரவாதிகள் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Subscribe to Oneindia Tamil

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் குண்டுகள் நிரப்பிய காரை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல், அவ்வப்போது ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொதுமக்களை எல்லாம்ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் வெட்டிக் கொன்றனர்.
இந்நிலையில், மேற்கூறிய தாக்குதல் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 8 பேருக்கு நேற்று சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜின்ஜியாங் மாகானத்தை சேர்ந்த உரும்கி இன மக்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தனிநாடு அமைக்கும் கோரிக்கையுடன் ஆயுதமேந்திய தீவிரவாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களில் அரசிடம் பிடிபடும் நபர்களுக்கு சீனாவின் கம்யூனிச ஆட்சி பெரும்பாலும் மரண தண்டனை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications