ச்சீ இதுக்கு போய் அடிமையா? ஜு அதிகாரிகளை அதிர வைத்த கொரில்லா குரங்கு.. உலகம் எதை நோக்கி போகுதோ!
சிகாகோ: அமெரிக்காவில் இருக்கும் கொரில்லா குரங்கு ஒன்று மனிதர்களை போலவே வித்தியாசமான விஷயம் ஒன்றுக்கு அடிமை ஆகி உள்ளதாம்.
21ம் நூற்றாண்டில் மனிதர்கள் பலர் அதிகம் அடிமை ஆன விஷயம் என்றால் அது டிஜிட்டல் ஸ்க்ரீன்தான். குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை எல்லோரும் போன் பயன்படுத்துவது அதிகம் ஆகி உள்ளது.
இன்ஸ்டா ரீல்ஸ் தொடங்கி பேஸ்புக் வரை நேரம் செல்வதே தெரியாமல் மக்கள் எந்நேரமும் போன் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து உள்ளது.

அடிமை
பலர் காலையில் எழுந்தவுடன் போனை எடுத்தால் இரவு தூங்கும் வரை போனை நோண்டும் அளவிற்கு அடிமையாகி உள்ளனர். மருத்துவர்கள் பலர் கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்க, சரியாக யோசிக்க போன்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனாலும் பலரால் போன்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இது மனிதர்கள் மட்டுமின்றி தற்போது குரங்குகளுக்கும் பரவி உள்ளதுதான் பரிதாபம்.

பரிதாபம்
ஆம் அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் லிங்கன் பார்க் விலங்குகள் சரணாலயத்தில் கொரில்லா குரங்கு ஒன்று போனுக்கு அடிமை ஆகி உள்ளது. 16 வயது நிரம்பிய அமேரா என்ற குரங்கு அங்கு செல்போன் பார்க்க அடிமை ஆகி உள்ளது. அந்த அமேரா குரங்கு சொந்தமாக போன் வைத்திருக்கவில்லை. அந்த குரங்கிடம் அங்கு கண்ணாடி ஸ்கிரீன் மூலம் போன் வீடியோக்களை காண்பித்துள்ளனர். முக்கியமாக குரங்கு வீடியோக்களை காண்பித்துள்ளார்.

அடிமை
இதை பார்த்த பலர் அங்கு வரிசையாக அந்த குரங்கிற்கு வீடியோவை காண்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி வரிசையாக பல வீடியோக்களை பார்க்க குரங்கு.. அதன்பின் மக்கள் யார் வந்தாலும் அவர்களிடம் போனை கேட்டு சைகை செய்ய தொடங்கி இருக்கிறதாம். யாராவது வீடியோ போட்டால் அங்கேயே பல மணி நேரம் உட்கார்ந்து பார்த்து வருகிறதாம். அந்த குரங்கு வீடியோ பார்க்காத நாட்களில் சரியாக சாப்பிடுவது இல்லை என்று கூறப்படுகிறது.

வீடியோ
வீடியோ பார்ப்பதே அந்த குரங்கிற்கு வழக்கம். மற்ற நேரங்களில் கோபமாக இருக்கும். மற்ற ஆண் குரங்குகள், பெண் குரங்கிடம் கூட அது பேசாது. அந்த அளவிற்கு மோசமாக அமேரா குரங்கு நடந்து கொள்கிறது. அதை தற்போது கண்காணித்து வருகிறோம். அந்த குரங்கு கண்டிப்பாக போனுக்கு அடிமையாகி உள்ளது தெரிகிறது. இங்கே வரும் மக்களை அதனிடம் போனை காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்று சரணாலய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குரங்கு ஒன்று இப்படி போனுக்கு அடிமையான சம்பவம் சரணாலய ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications