ச்சீ இதுக்கு போய் அடிமையா? ஜு அதிகாரிகளை அதிர வைத்த கொரில்லா குரங்கு.. உலகம் எதை நோக்கி போகுதோ!
சிகாகோ: அமெரிக்காவில் இருக்கும் கொரில்லா குரங்கு ஒன்று மனிதர்களை போலவே வித்தியாசமான விஷயம் ஒன்றுக்கு அடிமை ஆகி உள்ளதாம்.
21ம் நூற்றாண்டில் மனிதர்கள் பலர் அதிகம் அடிமை ஆன விஷயம் என்றால் அது டிஜிட்டல் ஸ்க்ரீன்தான். குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை எல்லோரும் போன் பயன்படுத்துவது அதிகம் ஆகி உள்ளது.
இன்ஸ்டா ரீல்ஸ் தொடங்கி பேஸ்புக் வரை நேரம் செல்வதே தெரியாமல் மக்கள் எந்நேரமும் போன் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து உள்ளது.

அடிமை
பலர் காலையில் எழுந்தவுடன் போனை எடுத்தால் இரவு தூங்கும் வரை போனை நோண்டும் அளவிற்கு அடிமையாகி உள்ளனர். மருத்துவர்கள் பலர் கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்க, சரியாக யோசிக்க போன்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனாலும் பலரால் போன்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இது மனிதர்கள் மட்டுமின்றி தற்போது குரங்குகளுக்கும் பரவி உள்ளதுதான் பரிதாபம்.

பரிதாபம்
ஆம் அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் லிங்கன் பார்க் விலங்குகள் சரணாலயத்தில் கொரில்லா குரங்கு ஒன்று போனுக்கு அடிமை ஆகி உள்ளது. 16 வயது நிரம்பிய அமேரா என்ற குரங்கு அங்கு செல்போன் பார்க்க அடிமை ஆகி உள்ளது. அந்த அமேரா குரங்கு சொந்தமாக போன் வைத்திருக்கவில்லை. அந்த குரங்கிடம் அங்கு கண்ணாடி ஸ்கிரீன் மூலம் போன் வீடியோக்களை காண்பித்துள்ளனர். முக்கியமாக குரங்கு வீடியோக்களை காண்பித்துள்ளார்.

அடிமை
இதை பார்த்த பலர் அங்கு வரிசையாக அந்த குரங்கிற்கு வீடியோவை காண்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி வரிசையாக பல வீடியோக்களை பார்க்க குரங்கு.. அதன்பின் மக்கள் யார் வந்தாலும் அவர்களிடம் போனை கேட்டு சைகை செய்ய தொடங்கி இருக்கிறதாம். யாராவது வீடியோ போட்டால் அங்கேயே பல மணி நேரம் உட்கார்ந்து பார்த்து வருகிறதாம். அந்த குரங்கு வீடியோ பார்க்காத நாட்களில் சரியாக சாப்பிடுவது இல்லை என்று கூறப்படுகிறது.

வீடியோ
வீடியோ பார்ப்பதே அந்த குரங்கிற்கு வழக்கம். மற்ற நேரங்களில் கோபமாக இருக்கும். மற்ற ஆண் குரங்குகள், பெண் குரங்கிடம் கூட அது பேசாது. அந்த அளவிற்கு மோசமாக அமேரா குரங்கு நடந்து கொள்கிறது. அதை தற்போது கண்காணித்து வருகிறோம். அந்த குரங்கு கண்டிப்பாக போனுக்கு அடிமையாகி உள்ளது தெரிகிறது. இங்கே வரும் மக்களை அதனிடம் போனை காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்று சரணாலய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குரங்கு ஒன்று இப்படி போனுக்கு அடிமையான சம்பவம் சரணாலய ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications