காபூல் ஏர்போர்ட் அருகே ஆப்கனைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களை தடுத்து நிறுத்தி தாலிபான்கள் அடாவடி
காபூல் விமான நிலையத்திற்கு செல்ல முயன்றபோது சுமார் 140 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பிறர் உட்பட, 200 க்கும் மேற்பட்டோர், வியாழக்கிழமை காலைக்குள் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வர திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து அவர்கள் இந்தியா அழைத்து வர திட்டமிடப்பட்டருந்தது. ஆனால், தாலிபான்கள் விமான நிலையத்தின் அருகே, இவர்களை தடுத்துள்ளதாக இந்திய உலக மன்றம் தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் விருப்பம்
ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்லாமிய எமிரேட் என மாற்றப்பட்டுள்ள ஆப்கனிலேயே தொடர்ந்து இருந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று தலிபான் வலியுறுத்தி வருகிறது. எனவே அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வோரை தடுக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், தாலிபான்களால் கொடுமைக்குள்ளாக்கப்படுவார்கள் அல்லது மதம் மாற கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுவதால், அவர்கள் இந்தியா வர திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

இந்தியா முயற்சி
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற விமானங்களை இயக்க தொடங்கியதில் இருந்து இந்தியா மொத்தம் 565 நபர்களை வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்திய தூதரகத்தின் 175 பணியாளர்கள், 263 பிற இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட 112 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அடங்குவர்.

ஏர்போர்ட்டில் விமானங்களால் டிராபிக் நெரிசல்
தாலிபான்களால் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அவ்வளவு எளிதாக யாரும் தப்ப முடிவதில்லை. இது தவிர பல நாட்டு விமானங்களும் காபூலுக்கு வந்து செல்வதால், அங்கு பெரும் டிராபிக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து நாட்டு விமானங்களும், தாமதமாக கிளம்பிக் கொண்டுள்ளன.
Recommended Video

அகதிகள் பிரச்சினை
இதனிடையே, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப் அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவதற்கான கெடு தேதியான 31ம் தேதிக்குப் பின், நாட்டின் எல்லைகளை தலிபான்கள் மூட முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆப்கனின் எல்லைப் பகுதி மிகவும் நீளமாக உள்ளது. எனவே, அந்த நாட்டை வெளியுலகிலிருந்து துண்டிக்கும் தலிபான்களின் முயற்சி தோல்வியடையும். எனவே, நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைய ஏராளமானோர் முயல்வர். இது, மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications