ஹிஜாப் விதியை மீறிய மாணவிகள்! ஆப்கனில் பள்ளியை பூட்டிய தாலிபான்கள்! ஆசிரியர்களை நீக்கி அதிரடி உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மாணவிகள் சரியாக ஹிஜாப் அணியாததால் அந்த பள்ளியை தாலிபான் அரசு மூடியது. மேலும் ஆசிரியர்களையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
2021 ஆகஸ்டு முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

பெண்களுக்கான கட்டுப்பாடுகள்
விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க தடை, பூங்காக்களிலும் ஆண், பெண்கள் ஒரே நேரத்தில் செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. சமீபத்தில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தாடியை ஷேவ் செய்ய கூடாது. பைஜாமா, ஜிப்பா அணிந்து பணி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கட்டுப்பாடுகள்
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆப்கனில் தற்போது 7ம் வகுப்பு வரை மட்டும் மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பிறகு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. திறக்கப்பட்ட வகுப்புகளிலும் மாணவ-மாணவிகள் தனித்தனியே பாடம் கற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ‛டை' அணியக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு பூட்டு
இந்நிலையில் தான் பல்க் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹிஜாப் விதிகளை மீறியதாக அந்த பள்ளியை தாலிபான்கள் மூடியதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகளை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் புகாரை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அவர்களிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படாத நிலையில் இந்த நீக்க உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பு
ஆப்கானிஸ்தானில் மதத்தின் அடிப்படையில் பெண்கள் உள்பட அனைவருக்கும் தாலிபான் அரசு கடும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இருப்பினும் தாலிபான்கள் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications