இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி- கொரோனா அச்சத்தால் எல்லைகளை மூடியது அர்ஜென்டினா
ரோம்: இத்தாலியில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 368 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானதை அடுத்து அர்ஜென்டினா தன் நாட்டு எல்லைகளை மூடி வருகிறது.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. எனினும் சீனாவில் அதன் தாக்கம் குறைந்துவிட்டது. சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3213 ஆனது.

இதை தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவை அடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இங்கு நேற்று முன் தினம் ஒரே நாளில் 368 பேர் பலியாகிவிட்டனர்.
இதன் மூலம் அங்கு பலி எண்ணிக்கை 1,809 ஆக அதிகரித்துவிட்டது. 24,747 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அது போல் ஈரானிலும் ஒரே நாளில் 129 பேர் பலியாகிவிட்டனர். ஸ்பெயினிலும் பலி எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.
மருத்துவம், மருந்து, உணவு, பணி ஆகியவற்றுக்காக மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை என அரசு உத்தரவிட்டுள்ளது. அது போல் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவிலும் 56 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அர்ஜென்டினா அரசு முடிவு செய்துள்ளது. அது போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது. தென் கொரியாவில் 76 பேர் பலியான நிலையில் அனைத்து ஐரோப்பிய நாட்டு பயணிகளுக்கும் குடியுரிமை கட்டுப்பாடுகளை அந்நாடு மேலும் இறுக்கி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications