ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு... இடைக்கால தடை விதித்த ஆஸ்திரியா அரசு
வியன்னா: ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு மேசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த குறிப்பிட்ட பேட்ஜ் தடுப்பூசியைப் பயன்படுத்த ஆஸ்திரியா அரசு தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் குறைந்த வந்த கொரோனா பரவல், பிரிட்டன் உருமாறிய கொரோனாவுக்கு பின் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இதன் காரணமாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஐரோப்பிய நாடுகள் வேகப்படுத்தியுள்ளன. இதற்காக பைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரியாவின் தெற்கு பகுதியில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 49 வயது பெண் திடீரென்று உயிரிழந்தார். அதேபோல தடுப்பூசி எடுத்துக் கொண்ட மற்றொரு பெண்ணுக்கும் மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் இருவர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியும் ஒரே பேட்ஜை சேர்ந்ததாக இருந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள உடல்நிலை பாதிப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என ஆஸ்திரியா அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த குறிப்பிட்ட பேஜ் தடுப்பூசியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது வரை ஆஸ்டரா ஜெனெகா நிறுவனம் எவ்வித விளகத்தையும் தற்போது வரை அளிக்கவில்லை. அதேநேரம் இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த விரைவில் ஆஸ்திரியா சார்பில் உயர்மட்ட கமிட்டி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,557 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வைரஸ் பாதிப்பு 4.72 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல சிகிச்சை பலனிற்றி ஆஸ்திரியாவில் தற்போதுவரை 8,694 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications