ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தை.. 2 குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை.. களியாட்டத்தால் வந்த வினை
மினிரியோஸ்: பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு ஆணின் விந்தணுவில் இருக்கும் ஒரே ஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் இணைந்து குழந்தையாக மாறுகிறது. விந்தணுவில் எத்தனை கோடி உயிரணுக்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றுதான் கருமுட்டையுடன் இணைய முடியும்.
அதே சமயத்தில், சில நேரங்களில் பெண்ணிடம் இரண்டு கருமுட்டைகள் உருவாகி இருந்தால் அவற்றுடன் ஒரு உயிரணு சேர்ந்து இரட்டை குழந்தைகள் உருவாகின்றன.

கரு முட்டை
எத்தனை கரு முட்டை இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு உயிரணு மட்டுமே இணைய முடியும். இதுதான் அறிவியல். ஆனால், பிரேசலில் அதிசயத்தக்க வகையில் ஒரு கருவில் உருவாகிய இரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசிலின் கோயாஸ் மாகாணத்தில் உள்ள மினிரியாஸ் நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்தான் இப்படி கருவுற்று இருக்கிறார்.

அதிசயம்
அவர் கடந்த ஆண்டு ஒரே நாளில் இரு வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறார். இதில் கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு 10 மாதங்கள் கழித்து இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்த குழந்தைகளின் தந்தை யாராக இருக்கும் என அறிவதற்காக, தான் உறவு கொண்ட ஒருவரை அழைத்து வந்து டிஎன்ஏ சோதனை மேற்கொண்டார். டிஎன்ஏ சோதனையும் நடந்தது. இரண்டு ஆண்களும் முடிவிற்காக காத்தும் இருந்தனர்.

ரிசல்ட்
இதில் வந்த தகவல்தான் மருத்துவர்களையே தலை சுற்ற வைத்துவிட்டது. ஏனெனில், ஒரு குழந்தைக்கு மட்டுமே பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு நெகட்டிவ் என வந்திருக்கிறது. அதன் பிறகு, தான் உடலுறவு வைத்துக் கொண்ட மற்றொரு நபரை தேடிக் கொண்டு வந்து டிஎன்ஏ சோதனை செய்ததில் இன்னொரு குழந்தைக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தது. அதாவது, அந்த இரட்டை குழந்தைகளுக்கு தந்தை வேறு வேறு என்பதே டிஎன்ஏ சோதனையின் முடிவு.

டிஎன்ஏ சோதனை
இந்த விஷயம் குறித்து மருத்துவர் துலியோ ஜார்ஜ் என்பவர் கூறும் போது, "இதுபோல இரட்டை குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அரிதிலும் அரிதானது என்றாலும், சாத்தியமற்றது கிடையாது. மருத்துவ ரீதியாக இது Heteroparental Superfecundation (ஹெட்ரேபேரன்ட்டல் சூப்பர்ஃபிக்கன்டேஷன்) என அழைக்கப்படுகிறது. ஒரே தாயிடமிருந்து இரண்டு கருமுட்டைகள் வெவ்வேறு ஆண்களின் உயிரணுக்களுடன் இணையும் போது இந்த அரிய நிகழ்வு நடக்கிறது" என்றார்.

குழப்பம்
மேலும், கணிதத்தின் அடிப்படையில் 10 லட்சத்தில் ஒன்று என்ற வாயப்பிலேயே (probability) இந்த நிகழ்வு நடக்கும் எனக் கூறிய மருத்துவர், இதுவரை உலகிலேயே இதுபோல 20 சம்பவங்கள்தான் நடந்திருக்கின்றன எனவும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரட்டை குழந்தைகளை ஒரே தந்தை தான் பரமாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகளின் தாய் கூறும்போது, "குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தை எனத் தெரிந்ததும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. எனினும், இரண்டு குழந்தைகளையும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு தந்தையை பராமரித்துக் கொள்கிறார்" எனக் கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications