ஃபேஸ்புக் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்: கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடல்
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனம் மூடப்படுகிறது.
அரசியல் கட்சிகள் சார்பில் இந்நிறுவனம் முறைகேடாக பயன்பாட்டாளர்களின் தகவல்களை பெற்றதாக கூறப்பட்டது.
பல்வேறு செயலிகளின் மூலம் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது என சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
"பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து புரிந்து கொள்வதில் உறுதியாக உள்ளோம். இது மீண்டும் நடக்காமல் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவோம்" என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன?
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பிரிட்டனின் ப்ரெக்ஸிட் விவகாரங்களின் முடிவுகளை திசைதிருப்ப மில்லயன் கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
- தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்
- தனிநபர்களின் அந்தரங்க தரவுகளை திருடியதா பிரதமர் மோதியின் 'நமோ' செயலி?
எனினும் இதனை மறுக்கும் அனாலிடிக்கா நிறுவனம், இத்தாலி, கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தலையிட்டதாக பல பதிவுகள் கூறுகின்றன.
ஏன் மூடப்படுகிறது?
இது குறித்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் க்ளாரன்ஸ் மிட்சல், அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி பிபிசியிடம் பேசினார்.
"கடந்த பல மாதங்களாக எங்கள் நிறுவனத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனை சரி செய்ய முயற்சித்த போதிலும், அவதூறு கூறப்பட்டது." என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழியர்கள் நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் நடந்து கொண்டதாக நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், ஊடகங்கள் பல்வேறு தரப்பட்ட செய்திகளை வெளியிட்டதில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம்."
"இதன் விளைவாக, எங்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றது என்று தீர்மானிக்கப்பட்டது" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- ரஷ்யாவின் ராணுவ செலவினம் 20 சதவீதம் வீழ்ச்சி
- இளம் பெண்ணின் ஆடை உருவப்படும் காணொளியை நீங்கள் ஏன் பார்த்தீர்கள்?
- 1857ம் ஆண்டின் சிப்பாய்க் கலகம் பற்றிப் பேசும் மண்டை ஓட்டின் கதை
- டாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம்
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?















Click it and Unblock the Notifications