அமெரிக்காவில் சர்ச்சுக்குள் புகுந்து 9 கருப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற வெள்ளையர் கைது
சார்ல்ஸ்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல கருப்பினத்தவர்கள் தேவாலயத்திற்குள் புகுந்து 9 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் இருக்கும் பிரபல இமானுவல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் புதன்கிழமை மாலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. பிரபல கருப்பினத்தவர்களின் தேவாலயமான அதற்குள் புகுந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் 9 பேர் பலியாகினர். அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவர் தப்பியோடும்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் அவரது உருவம் பதிவாகியிருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்து போலீசார் வெளியிட்டு அவர் குறித்த விவரம் தெரிந்தால் கூறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.
இது குறித்து போலீசார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கால்ஹூன் தெருவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேடப்படும் நபரை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவுங்கள் என்று தெரிவித்திருந்தனர்.
Help police find the suspect in the shooting @ 110 Calhoun St pic.twitter.com/92GW7fMCTA
— Charleston P.D. (@CharlestonPD) June 18, 2015 இந்நிலையில் 9 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெயர் டிலன் ரூப். 21 வயதாகும் அவர் கருப்பினத்தவர்கள் மீது கொண்ட வெறுப்பால் இந்த செயலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications