மாஜி அமைச்சர் கைது.. ஊழல் புகாரில் வசமாக சிக்கியது அம்பலம்.. சீன அரசு அதிரடி நடவடிக்கை
ஊழல் குற்றச்சாட்டில் சீனாவின் மாஜி அமைச்சர் கைதானார்
பெய்ஜிங்: மாஜி அமைச்சர் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு அதிரடியாக கைது செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பல நாடுகளையும் முற்றிலுமாக புரட்டிப் போட்டு வருகிறது. சீனாவின் வூஹான் நகரிலுள்ள வைராலஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது.
வூஹான் நகரத்தில் இருந்துதான், மற்ற நாடுகளுக்கும் பரவியதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்குள் அந்த நாடு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியமுத. வீதரிமான முனனெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் கொத்து கொத்தாக மக்கள் விழுந்து இறந்தனர்.. ஒருகட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்திவிட்டாலும், உயிரிழப்புகளை குறைக்க முடியாமல் போய்விட்டது.. இப்படி சீனா திணறி கொண்டிருந்த நேரத்தில் ஒரு முக்கிய சம்பவம் அங்கு நடந்தது. அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் பெயர் சன்லிஜுன்..
இவர் ஏகப்பட்ட ஊழல்களை செய்து வந்திருக்கிறார். இது தொடர்பான விஷயங்கள் மெல்ல மெல்லதான் அரசுக்கு தெரியவந்துள்ளது. எனவே, அதுகுறித்து விசாரணயை மேற்கொண்டது.. கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே இந்த விசாரணை நடந்து வருகிறது.. ஆனால்,விசாரணை துரிதமாவதை கண்டதுமே, சுதாரித்து கொண்ட அந்த அமைச்சர் திடுதிப்பென்று தலைமறைவானார்..
தொற்றை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் மும்முரமாகி கொண்டிருக்கும்போது, ஒரு பாதுகாப்பு அமைச்சரே தலைமறைவானது பரபரப்பாக பேசப்பட்டது.. இதையடுத்து, அந்த பதவியில் இருந்து அவரை அதிகாரப்பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சி நீக்கி உத்தரவிட்டது. மேலும் தொடர்ந்து அந்த ஊழல் தொடர்பான விசாரணையும் நடந்து வந்த நிலையில், தற்போது அந்த புகார் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. அமைச்சரின் ஊழலும் அம்பலமாகி உள்ளது..
இதையடுத்து, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்துள்ளனர் அந்நாட்டு அரசு. அதாவது மாஜி அமைச்சர், அங்கீகாரம் இல்லாமல் ரகசிய பொருட்களை வைத்திருந்ததாகவும் நீண்ட காலமாக மூடநம்பிக்கை நடவடிக்கை செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர் மீது மேலும் புகார்கள் உள்ளன..
அதுமட்டுமல்ல, கட்சியின் கொள்கைகளுக்கும், அரசுக்கும் நம்பிக்கையாக சன் ஒருபோதும் இருந்ததில்லை என்றும், மிக மோசமான அரசியல் நேர்மையையே வெளிப்படுத்தி வந்ததாகவும், கட்சியின் கொள்கைகள் மீது ஆதாரமற்ற விமர்சனங்களை வெளியிட்டதுடன், அரசியல் வதந்திகளை பரப்பினார் என்றும் இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. மிக முக்கிய துறையில் இருந்த மாஜி அமைச்சர் கைதாகி உள்ளது சீன அரசியலில் பரபரப்பை தந்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications