சைபர் போருக்குத் தயாராகும் சீனா.. உலகின் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்!
உலகில் இருக்கும் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சீனா புதிய திட்டம் உருவாக்கி இருக்கிறது.
பெய்ஜிங்: 3ம் உலகப் போர் என்ற ஒன்று நடந்தால் கண்டிப்பாக அது அணு ஆயுத போராக இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேலை சைபர் போராக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போதே சைபர் போர் ஆரம்பித்துவிட்டது. ரஷ்யா ஏற்கனவே இதில் முக்கியமான இடத்தில் இருக்கிறது.
இதனால் உலகில் இருக்கும் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சீனா புதிய திட்டம் உருவாக்கி இருக்கிறது. பாஜக கட்சி குஜராத் மாடல் என்று பிரச்சாரம் செய்தது போலவே தற்போது சீனா ரஷ்யா மாடலை உருவாக்கி இருக்கிறது.

ரஷ்யா ஆட்டம்
அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் ரஷ்யா இந்த வேலையைச் செய்தது. பேஸ்புக் விளம்பரங்களில் எந்த அதிபர் வேட்பாளருக்கு எதிராகக் கருத்து வர வேண்டும், யாருக்கு ஆதரவாக வர வேண்டும் என்று பேஸ்புக்கை ரஷ்யா கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் டிரம்ப்பிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.

சீனா பாதுகாப்பு
இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்றுதான் சீனா தனியாகச் சமூக வலைத்தளம் வைத்துள்ளது. யு டியூப், கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் என எதுவுமே அந்த நாட்டில் கிடையாது. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 5க்கும் குறைவான சமூக வலைத்தளங்கள் மட்டும் அங்கு இருக்கிறது.

பிரச்சனை
ஆனால் ரஷ்யா இங்கேயும் வேலையைக் காட்டியது. சில மாதங்கள் முன்பு சீனாவின் உயரிய அதிகாரிகள் குறித்த புகார் கட்டுரைகள் அந்நாட்டுச் சமூக வலைத்தளங்களில் வந்தது. அதைப் பரப்பியதே ரஷ்யாதான் என்று சீனா பின்பு குற்றச்சாட்டு வைத்தது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றும் நினைத்தது.

திட்டம்
தற்போது ரஷ்யா போலவே சீனாவும் மற்ற நாட்டுச் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த இருக்கிறது. மேலும் தங்கள் நாட்டுச் சமூக வலைத்தளங்களைப் பாதுகாக்கவும் 11 பில்லியின் டாலர் வரை ஒதுக்கி இருக்கிறது. இது இணையப் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ஆகும்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications