சைபர் போருக்குத் தயாராகும் சீனா.. உலகின் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்!
உலகில் இருக்கும் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சீனா புதிய திட்டம் உருவாக்கி இருக்கிறது.
பெய்ஜிங்: 3ம் உலகப் போர் என்ற ஒன்று நடந்தால் கண்டிப்பாக அது அணு ஆயுத போராக இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேலை சைபர் போராக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போதே சைபர் போர் ஆரம்பித்துவிட்டது. ரஷ்யா ஏற்கனவே இதில் முக்கியமான இடத்தில் இருக்கிறது.
இதனால் உலகில் இருக்கும் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சீனா புதிய திட்டம் உருவாக்கி இருக்கிறது. பாஜக கட்சி குஜராத் மாடல் என்று பிரச்சாரம் செய்தது போலவே தற்போது சீனா ரஷ்யா மாடலை உருவாக்கி இருக்கிறது.

ரஷ்யா ஆட்டம்
அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் ரஷ்யா இந்த வேலையைச் செய்தது. பேஸ்புக் விளம்பரங்களில் எந்த அதிபர் வேட்பாளருக்கு எதிராகக் கருத்து வர வேண்டும், யாருக்கு ஆதரவாக வர வேண்டும் என்று பேஸ்புக்கை ரஷ்யா கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் டிரம்ப்பிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.

சீனா பாதுகாப்பு
இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்றுதான் சீனா தனியாகச் சமூக வலைத்தளம் வைத்துள்ளது. யு டியூப், கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் என எதுவுமே அந்த நாட்டில் கிடையாது. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 5க்கும் குறைவான சமூக வலைத்தளங்கள் மட்டும் அங்கு இருக்கிறது.

பிரச்சனை
ஆனால் ரஷ்யா இங்கேயும் வேலையைக் காட்டியது. சில மாதங்கள் முன்பு சீனாவின் உயரிய அதிகாரிகள் குறித்த புகார் கட்டுரைகள் அந்நாட்டுச் சமூக வலைத்தளங்களில் வந்தது. அதைப் பரப்பியதே ரஷ்யாதான் என்று சீனா பின்பு குற்றச்சாட்டு வைத்தது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றும் நினைத்தது.

திட்டம்
தற்போது ரஷ்யா போலவே சீனாவும் மற்ற நாட்டுச் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த இருக்கிறது. மேலும் தங்கள் நாட்டுச் சமூக வலைத்தளங்களைப் பாதுகாக்கவும் 11 பில்லியின் டாலர் வரை ஒதுக்கி இருக்கிறது. இது இணையப் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ஆகும்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications