கொரோனாவை தடுக்க வேறுவழியில்லை.. சீனா எடுத்த முடிவு.. கொதிக்கும் மக்கள்!
பெய்ஜிங்: சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் சீனாவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், திடீரென சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் சீன அதிகாரிகள் மலவாய் பரிசோதனை என்ற கொரோனா வைரஸ் பரிசோதனையாக அறிமுகப்படுத்தியுள்ளது, இது வைரஸை இன்னும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.
கொரோனா தொற்றை கண்டுபிடிக்க ஆசன வாய் துவாரத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கும் சீன அரசின் செயலுக்கு, அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உலகில் முதல் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா, மீண்டும் 2வது அலை பரவ தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் கடுமையாக போராடி வருகிறார்கள்,.

மல துவாரம்
பொதுவாக கொரோனா வைரசை கண்டுபிடிக்க மூக்கு, தொண்டையில் இருந்து சளி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்படுகிறது. ரத்த மாதிரி, உமிழ் நீர் மூலமும் தொற்று கண்டறியப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இந்த பரிசோதனைகளை விட வினோதமான ஒரு பரிசோதனையை சீனா தனது நாட்டில் அறிமுகம் செய்திருக்கிறது. மல துவாரத்தில் பரிசோதனை செய்வதாகும்.

கண்டுபிடிப்பது சுலபம்
உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும் பகுதியில் கொரோனா நீண்ட நேரம் உயிருடன் இருக்கும் என்பதால், அதை கண்டுபிடிப்பது சுலபம் என்று இதற்கான காரணத்தை கூறி சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் மல துவாரத்தின் மூலம் கொரோனா வைரஸை துல்லியமாக கண்டுபிடிக்கிறார்கள்.

2006 ல் முடிவு
இது பற்றி சீனாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், '''கடந்த 2006ம் ஆண்டில் சார்ஸ் தொற்று ஏற்பட்டபோது இந்த மலவாய் பரிசோதனை முறை கடைபிடிக்கப்பட்டபோது நல்ல பலன் கிடைத்தது. அதனால், மீண்டும் மலத் துவார பரிசோதனையை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

சீனர்கள் கடும் எதிர்ப்பு
மற்ற பரிசோதனைகளை விட இதில் துல்லியமான முடிவுகள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்புகிறவர்களுக்கும், கொரோனா அதிகம் பரவும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் இந்த பரிசோதனை நடத்தப்படும்,'' என்றார்கள் இதற்கு, சீனர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த பரிசோதனையால் அசவுகரியமான நிலை ஏற்படுவதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது

வெற்றிகரமாக பரிசோதனை
எனினும் சீன மலவாய் பரிசோதனையில் உறுதியாக உள்ளது. கொரோனா மீண்டும் பரவுவதைத் தடுக்க சீனா இத்தகைய உச்சபட்ச நடவடிக்கைக்கு தயராக உள்ளது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை நீண்ட காலத்திற்குத் தனிமைப்படுத்துகிறது மற்றும் கட்டாய சோதனை முறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த அணுகுமுறை பெரும்பாலும் வெற்றிகரமாக இருப்பதாக கூறுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தவிர்க்க கடுமையாக நடவடிக்கையால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிந்ததாக சீனா நம்புகிறது. சந்திர புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் கடுமையாக சோதனைகள் மூலம் பரவலை தடுக்க பணிகளை சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications