மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... இரண்டு நகரங்களை முற்றிலும் முடக்கிய சீனா
பெய்ஜிங்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஹுபே மாகாணத்தில் இருக்கும் இரு நகரங்களைச் சீன அரசு முற்றிலுமாக முடக்கியுள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் பரவ தொடங்கியது. சீனா முதலில் வைரஸ் பரவலைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் பின்னர் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
இதன் காரணமாக வைரஸ் பரவல் அந்நாட்டில் விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்தாண்டு பிற்பகுதியிலேயே சீனாவில் இயல்பு நிலை திரும்பியது.

மீண்டும் கொரோனா பரவல்
இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. குறிப்பாக, அம்மாகாணத்தில் இருக்கும் ஷிஜியாஜுவாங் மற்றும் ஜிங்டாய் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு பரவலாக உறுதி செய்யப்பட்டது.

கடும் ஊரடங்கு
இதையடுத்து இந்த இரு நகரங்களிலும் கடும் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கை அந்நாட்டு அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இரு நகரங்களைச் சேர்ந்த மக்களும் நகரை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியிலிருந்து வந்த கொரோனா பாதிப்பு
தற்போது கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் அனைத்தும் மற்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மூலம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு என்றும் இதைத் தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹூபே மாகாண அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், அங்கிருக்கும் மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.21 கோடி பேருக்கும் இந்தியாவில் 1.04 கோடி பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications