எனக்கு “எண்டே” கிடையாது.. ஹாங்காங்கை பிடிச்சுட்டோம்.. அடுத்த “எய்ம்” தைவான் - ஜி ஜின்பிங் அதிரடி
பெய்ஜிங்: சீன ராணுவம் அதிபரை சிறைபிடித்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் இன்று சீன அதிபர் பதவியை தொடர உள்ளார்.
சீனாவில் பல ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில் இன்று சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடைபெற இருக்கிறது.
தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் சீனாவில் மற்ற ஜனநாயக நாடுகளைபோல் தேர்தல் நடத்தி ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை. இப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டிலேயே புதிய அதிபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும்.

சீன அதிபர்
இந்த நிலையில் கடந்த 2 முறை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்கே 3 வது முறையாக அதிபராக சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தேர்வு செய்யப்பட இருக்கிறார். சீனாவில் ஒருவர் 2 முறைதான் அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டம் இருந்து வந்தது. எந்த தலைவரும் சீனாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பதவி வகித்தது இல்லை,

ஜின்பிங்கின் தந்திரம்
ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு சீனாவின் அதிபராக 2 வது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங் 2018 ஆம் ஆண்டிலேயே அந்த சட்டத்தை நீக்கினார். எனவே இன்று மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்கப்போகும் ஜி ஜின்பிங் சீன கம்யூனிஸ்டு அரசின் வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபராக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார்.

கொரோனா
69 வயதாகும் ஜி ஜின்பிங் அதிபரான பிறகு சீனா உலக அரங்கில் மாபெரும் வல்லரசாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் ஜி ஜின்பிங் மீது சர்வதேச அரங்கில் அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், முதல் அலைக்கு பிறகு சீனாவும் கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டது.

வதந்தி
கடந்த சில நாட்களுக்கு முன் ஜி ஜின்பிங்கை சீன ராணுவம் கைது செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்த குழப்பத்துக்கு இன்று முதல் முறையாக பொதுமேடையில் தோன்றினார் ஜி ஜின்பிங்.

ஹாங்காங்கை
இந்த மாநாட்டில் பேசிய அவர், ஹாங்காங்கின் முழு அதிகாரத்தையும் சீனா கைப்பற்றிவிட்டது. விரைவில் தைவானையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்றார். தைவான் பிரச்சனையை சீன மக்கள் சரி செய்வோம். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலக நாடுகளின் முயற்சியில் சீனாவும் அங்கம் வகிக்கும்." என்றார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications