இந்தியாவுக்கு வார்னிங்.. ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பமும் ரெடி.. அதிர வைக்கும் சீனாவின் திட்டம்!
பெய்ஜிங்: ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
எதிரி நாட்டு ஏவுகணைகள் தாக்க வந்தால், அதை தடுத்து நிறுத்தி இடைமறித்து தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை சீனா இதன் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பம் கொண்ட இரண்டாவது நாடு என்று பெருமையை சீனா பெற்றுள்ளது.
இதனிடையே எந்த ஒரு நாட்டையும் குறிவைத்த நாங்கள் இடைமறிப்பு ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும், தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

எப்போது சோதனை
ரஷ்யாவுடனான முக்கிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவின் பிடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதன்படி அணுசக்தி அபாயக் குறைப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்து சீனா உறுதிமொழி அளித்தது. அந்தவாக்குறுதி அளித்த ஒரே நாளில் சீன ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுடபத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த பயிற்சி குறித்த தொழில்நுட்ப விவரங்களை சீனா இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவிற்கு வார்னிங்
இந்த சோதனை எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்கவில்லை என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தாலும், பி.எல்.ஏ-க்கு(சீன மக்கள் ராணுவததிற்கு நெருக்கமான ஒரு வட்டாரங்கள் கூறுகையில், இந்த மிட்கோர்ஸ் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை சோதனை என்பது நம்மை நோக்கி வரும் அணு ஆயுத ஏவுகணைகளை தடுத்து நிறுத்தக்கூடியது. இது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையாக கூட கருதலாம் என்றார்கள்.

இந்தியா திட்டம்
இந்த ஆண்டு அக்னி-வி என்ற தனது மிக நீண்ட, மிக சக்திவாய்ந்த அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை நிலைநிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிரபல ஆங்கில நாளிதழில் ஜனவரி மாதம் செய்தி வெளியானது.. சீனா-இந்தியா எல்லையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து இந்தியா இந்த முடிவை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ரெடியாகும் சீனா
இதன்படி அக்னி-வி ஏவுகளை 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும். தற்போது சீனா கண்டறித்துள்ள ஏவுணை இடைமறிப்பு தொழில்நுட்பம்
என்பது சீனா நீண்ட காலமாக ஆராய்ச்சி தொழில்நுட்பமாகும். நேற்று சோதனை நடத்தியன் மூலம் இந்தியாவை எச்சரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா இந்தியாவை அச்சுறுத்தும் யுக்தியாக நேற்று சோதித்து இருக்கலாம் என்கிறார்கள். இந்த பிரச்சினையின் தீவிரமாக சீன ராணுவட்டாரத்தினர் அதன் பெயரை குறிப்பிடவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications