ஜப்பான் கடற்பரப்புக்குள் ஊடுருவிய சீனா உளவு கப்பலால் பதற்றம்
டோக்கியோ: ஜப்பான் கடற்பரப்புக்குள் சீனாவின் உளவு கப்பல் ஊடுருவியதால் அப்பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
ஜப்பான் கடற்பரப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் இணைந்து பிரமாண்ட கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தி வருகின்றன. நாளை மறுநாள் இந்த கூட்டு பயிற்சி நடைபெறும்.
கடந்த 20 ஆண்டுகாலமாக மலபார் கூட்டு கடற்படை பயிற்சி என்ற பெயரில் இது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டு பயிற்சி சீனாயை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதனிடையே இக்கூட்டுப் பயிற்சி நடைபெறும் கடற்பரப்புக்குள் சீனாவின் உளவு கப்பல் ஒன்று அத்துமீறி ஊடுருவியுள்ளதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தென் சீனா கடற்பரப்பு விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா மீது சீனா கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஜப்பானுடன் கடற்பரப்பு விவகாத்தில் மோதல் போக்கை சீனா கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.