கொலம்பியாவில் புயல்மழையால் நிலச்சரிவு: 254 பேர் பலி... மீட்பு பணிகள் தீவிரம்
கொலம்பியாவின் மகோவா நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு 254 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மகோவா: கொலம்பியாவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கி 254 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
கொலம்பியாவின் புட்டமேயோ மாகாணத்தில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர் அங்கும், அதை சுற்றியுள்ள நகரங்களில் சாலைகளில் குப்பை கூளங்களால் சாலைகளே சின்னாபின்னமானது. மேம்பாலங்கள் தரை மட்டமாகின. அங்கிருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதை தொடர்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகியுள்ளன. ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை மீட்பதற்காக 1,100 ராணுவ வீரர்களும், போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து இதுவரை 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 200 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் கொலம்பியா அதிபர் ஜூயான் மானுவேல் சான்டோஸ் மீட்புப் பணிகளை காண சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப் பொருள்களை விநியோகம் செய்து வருகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications