பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இரு நீர் யானைகளுக்கு கொரோனா!
ப்ரஸல்ஸ்: பெல்ஜியத்தில் உள்ள வன உயிர்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரமாண்ட உருவம் கொண்ட இரு நீர்யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலகெங்கும் பரவியது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் கொரோனா வைரஸ் உடன் போராடி வருகிறது. அமெரிக்காவில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் ஒரு கை பார்த்த கொரோனா பொருளாதாரம் வளர்ச்சி சுகாதார கட்டமைப்புகளை சிதைத்து விட்டது எனக் கூறலாம்..

உலகமெங்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஒரு பெருத்த அடியாக இருந்தது. ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த நிலையில் லட்சக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடி குணமடைந்தனர்..இரண்டு முழு ஊரடங்கு, அடுத்தடுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் என வாழப் பழகிய மக்கள், முககவசம், தனிமனித இடைவெளி, சனிடைசர் இன்றி வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..

விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு
மீண்டும் உருவம் மாறுபாடு அமைந்த கொரோனா டெல்டா, ஆல்ஃபா என மாறி தற்போது ஓமிக்ரான் என உருமாறி உள்ளது. இருந்தபோதும் கோவிட் 19 எனும் கொரோனா இன்னும் ஆங்காங்கே சிறிய அளவில் பரவி வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் நாய், பூனை, சிங்கம், புலி என பல்வேறு விலங்குகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் ஆச்சரியமாக நீர்யானைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இரு நீர்யானைகளுக்கு கொரோனா
பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் யானை சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் சில உயிரினங்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அங்குள்ள நீர் யானைகளுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் 14 மற்றும் 41 வயதுடைய இரு பிரம்மாண்ட நீர் யானைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யானைகளுக்கு கொரொனா எப்படி பரவியது என்பது தெளிவாக தெரியவில்லை.

நீர்யானைகள் நலமாக உள்ளன
பெல்ஜியம் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ள நிலையில், உயிரியல் பூங்காவிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன . பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் நீர் யானைகளுக்கு தொற்று எப்படி பரவியது என்பது புரியாத நிலையில் இரு நீர்யானைகலும் நலமாக இருப்பதாகவும் சிறிய அளவில் மூக்கு ஒழுகுதல் அவதிப்பட்டு அவற்றை பூங்கா மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக பூங்காவை பராமரித்து வரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications