இத்தாலியில் எங்கும் மரண ஓலம்.. ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி
ரோம்: கொரோனா வைரஸ் தொற்று நோயால் இத்தாலியில் ஒரு நாளில் 475 பேர் இறந்துள்ளனர். இதுதான் இத்தாலியில் ஒரே நாளில் இது நாள் வரை அதிகபட்ச உயிரிழப்பு என்கிறார்கள். மொத்த இத்தாலியும் மரண ஓலத்தில் தவித்து வருகிறது.
உலகத்தை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மொத்தமும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் நடுங்கி போய் உள்ளன. மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, மாஸ்க், சானிடைசர்கள் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பா மொத்தமும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. குறிப்பாக இத்தாலியில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அங்கு அதிகரித்துவரும் நோயாளிகளை சமாளிக்கும் சக்தி அந்நாட்டு அரசுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அந்ந அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இத்தாலியில் பலி
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 475 பேர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகமே கொரேனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் இத்தாலியில் அதிகரிக்கும் மரணங்கள் உலக மக்களை கவலையிலும் அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது.

முடங்கியது இத்தாலி
இத்தாலியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. உத்தரவை மீறும் நபர்களால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் இத்தாலி மக்கள் செய்வதறியாது திகைத்து விரக்தி அடைந்து வருகின்றனர்.

35713 பேருக்கு பாதிப்பு
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35713 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000த்தை தொட்டுள்ளது. சுமார் 4000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.

இத்தாலியில் மிக மோசம்
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி தான் உலகிலேயயே மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஆனால் மரண விகிதத்தில் இத்தாலி சீனாவை மிஞ்சும் என அச்சம் நிலவுகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 8758 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் தான்அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications