எப்படிதான் பரவுகிறது?.. சீனாவில் அதிகாரிகளை திகைக்க வைத்த கொரோனா.. 14 பெரிய நகரங்கள் பாதிப்பு
பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. திடீரென சீனாவில் கேஸ்கள் உயர்ந்து வருவது அந்நாட்டு அதிகாரிகளை குழப்பி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, யுகே உள்ளிட்ட பல நாடுகளில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பல நாடுகளில் A.Y 4.2 வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது.
ரஷ்யா, யுகே, இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் A.Y 4.2 வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் மூன்றாம் அலையை தூண்டி விடுமோ என்ற அச்சத்தை எழுப்பி உள்ளது.

சீனா
இந்த நிலையில்தான் சீனாவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 13 நாட்களில் அங்கு 377 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் பதிவான கேஸ்களில் இதுதான் அதிகமான இரண்டு வார கேஸ்களாக பார்க்கப்படுகிறது. சீனாவில் புதிய கொரோனா அலையை இது ஏற்படுத்தி உள்ளதோ என்ற அச்சத்தை அந்நாட்டு மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகள்
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இது குறைவாக தெரிந்தாலும், சீனாவின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இடையில் இந்த வைரஸ் எப்படி பரவியது என்பது பெரிய கேள்வியாகி உள்ளது. அந்நாட்டு அதிகாரிகளுக்கு இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். வைரஸ் எங்கிருந்து மீண்டும் தோன்றியது, எப்படி திடீரென பரவுகிறது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகிறார்கள்.

லாக்டவுன்
கடந்த 14 நாட்களில் இதனால் 14 பெரிய நகரங்கள் சீனாவில் லாக்டவுனில் மூழ்கி உள்ளது. இந்த 14 நகரங்களில் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்த கொரோனா பரவல் நினைத்ததை விட வேகமாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக சீனாவின் வடகிழக்கு பகுதியில் புதிய கேஸ்கள் முதலில் தோன்றியது.

எப்படி வந்தது?
அதன்பின் தற்போது தென் கிழக்கு பகுதியில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. இது இரண்டும் சீனாவின் இரண்டு எதிர் எதிர் பகுதிகள் ஆகும். இதனால் சீனாவில் இரண்டு வெவ்வேறு சோர்ஸ்கள் மூலம் கொரோனா பரவல் ஏற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டு வெவ்வேறு பகுதிகளில் சம்மந்தமே இன்றி கொரோனா பரவுவது அதிகாரிகளை குழப்பி உள்ளது.

யோசனை
அண்டை நாடுகளில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகம் கண்டறியப்பட்ட நிலையில் அதன் காரணமாக இப்படி கேஸ்கள் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!












Click it and Unblock the Notifications