Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படிதான் பரவுகிறது?.. சீனாவில் அதிகாரிகளை திகைக்க வைத்த கொரோனா.. 14 பெரிய நகரங்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. திடீரென சீனாவில் கேஸ்கள் உயர்ந்து வருவது அந்நாட்டு அதிகாரிகளை குழப்பி உள்ளது.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, யுகே உள்ளிட்ட பல நாடுகளில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பல நாடுகளில் A.Y 4.2 வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

ரஷ்யா, யுகே, இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் A.Y 4.2 வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் மூன்றாம் அலையை தூண்டி விடுமோ என்ற அச்சத்தை எழுப்பி உள்ளது.

சீனா

சீனா

இந்த நிலையில்தான் சீனாவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 13 நாட்களில் அங்கு 377 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் பதிவான கேஸ்களில் இதுதான் அதிகமான இரண்டு வார கேஸ்களாக பார்க்கப்படுகிறது. சீனாவில் புதிய கொரோனா அலையை இது ஏற்படுத்தி உள்ளதோ என்ற அச்சத்தை அந்நாட்டு மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இது குறைவாக தெரிந்தாலும், சீனாவின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இடையில் இந்த வைரஸ் எப்படி பரவியது என்பது பெரிய கேள்வியாகி உள்ளது. அந்நாட்டு அதிகாரிகளுக்கு இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். வைரஸ் எங்கிருந்து மீண்டும் தோன்றியது, எப்படி திடீரென பரவுகிறது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகிறார்கள்.

லாக்டவுன்

லாக்டவுன்

கடந்த 14 நாட்களில் இதனால் 14 பெரிய நகரங்கள் சீனாவில் லாக்டவுனில் மூழ்கி உள்ளது. இந்த 14 நகரங்களில் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்த கொரோனா பரவல் நினைத்ததை விட வேகமாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக சீனாவின் வடகிழக்கு பகுதியில் புதிய கேஸ்கள் முதலில் தோன்றியது.

எப்படி வந்தது?

எப்படி வந்தது?

அதன்பின் தற்போது தென் கிழக்கு பகுதியில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. இது இரண்டும் சீனாவின் இரண்டு எதிர் எதிர் பகுதிகள் ஆகும். இதனால் சீனாவில் இரண்டு வெவ்வேறு சோர்ஸ்கள் மூலம் கொரோனா பரவல் ஏற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டு வெவ்வேறு பகுதிகளில் சம்மந்தமே இன்றி கொரோனா பரவுவது அதிகாரிகளை குழப்பி உள்ளது.

 யோசனை

யோசனை

அண்டை நாடுகளில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகம் கண்டறியப்பட்ட நிலையில் அதன் காரணமாக இப்படி கேஸ்கள் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+