சச்சின் புகழ் பாடுவதை நிறுத்துங்கள்!: பாக். மீடியாக்களுக்கு தாலிபான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள டிவி சானல்கள், இந்தியரான சச்சினை புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தாலிபான் பயங்கரவாத அமைப்பு, எச்சரி்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது இந்திய அரசு.
கடந்த சில வாரங்களாகவே சச்சின் டெண்டுல்கர் பற்றிய கட்டுரைகளும், அவரது சாதனையைப் பற்றிய சிறப்பு செய்திகளும்தான் டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகின.

பாகிஸ்தான் பத்திரிக்கைகளிலும், சச்சின் டெண்டுல்கரைப் பற்றிய கட்டுரைகளும் அதிக அளவில் எழுதப்பட்டன. டிவி சேனல்களிலும் சிறப்பு செய்திகள் ஒளிபரப்பாகின.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் பாக் ஊடகங்களில் முதன்முறையாக இந்தியரைப் பற்றி புகழ்ந்து எழுவது இப்போதுதான் முதன்முறையாகும்.
த எக்ஸ்பிரஸ் டிரிபியூன், டெய்லி டைம்ஸ் போன்ற நாளிதழ்கள் சச்சின் புகழ் பாடியுள்ளன. 100 செஞ்சுரி, 200 டெஸ்ட் போட்டி, 15000 ரன்கள் என யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனைகளை செய்துள்ளார் சச்சின் என உருது பத்திரிக்கை ஒன்றும் கட்டுரை எழுதியுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறன்று ஏகே.47 துப்பாக்கி சகிதம் நின்று கொண்டு பேசியுள்ள தாலிபன் கமென்டோ, சச்சினை புகழ்வதை பாகிஸ்தான் ஊடகங்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் ஒரு இந்தியர் என்பதை பாகிஸ்தான் ஊடகங்கள் மறந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
இந்த வீடியோ கவரேஜ் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications