அமெரிக்காவில் பயங்கரம்: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
ஆஸ்டின்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்ட்ராப் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது சிறுவன் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில தலைநகரான ஆஸ்டினில் இருந்து 35 மைல் தொலைவில் உள்ளது பாஸ்ட்ராப் நகரம். 7 ஆயிரத்து 500 பேர் வசிக்கும் அந்த நகரில் சனிக்கிழமை மாலை ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் 3 வயது சிறுவன், 2 பெண்கள் பலியாகினர். பின்னர் அந்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலியானவர்கள் அலெக்ஜான்ட்ரோ மார்டினெஸ்(20), எரிகா ரோட்ரிகஸ்(21), பாலா நினோ(20) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பலியான சிறுவன் மற்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரின் விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications