வெள்ளாக்காடாக தமிழகம்... உதவிகளை அனுப்ப பிரான்ஸ் ஈழத் தமிழர்கள் வேண்டுகோள்
யாழ்ப்பாணம்/பாரீஸ்: வரலாறு காணாத பெருமழையில் தமிழகம் வெள்ளக்காடாகி வரும் நிலையில் ஈழத் தமிழர்களும் தங்களது நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நூறாண்டு காணாத பெருமழையால் சென்னை உருக்குலைந்து போனது... ஒரு மாத கனமழையால் கடலூர் கடல் போல ஆனது. ஏரிகள், ஆறுகள் நிரம்பி வழிந்தோடுவதால் காஞ்சிபுரமும் திருவள்ளூரும் தண்ணீர்தேசமாகிப் போனது..

பேரவலத்தில் தத்தளிக்கும் இந்த மாவட்டங்களின் துயரைத் துடைக்க தமிழகம் முழுவதும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதேபோல் ஈழத் தமிழர்களும் தாய்த் தமிழ் உறவுகளுக்காக தங்களது நிவாரணப் பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நினைத்துப் பார்க்க முடியாத துயரைத் தமிழகம் சந்தித்துள்ளது. எங்களுடைய தமிழ் உறவுகள் இன்று இயற்கைச் சீறத்தால் ஆற்றொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்; அவர்களின் துயரமும் துன்பமும் எம்மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வலி, வேதனையையும் எம்மால் நன்கு உணர முடியும். தாய்த் தமிழக தொப்புள்கொடி உறவுகளின் துயரைத் துடைப்பது உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மிகப் பெரிய கடமையாகும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்சில் இயங்கும் தமிழ் அமைப்புகள், கோவில்கள், சங்கங்கள் தம்மால் ஆன உதவிகளை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications