Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.. 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. திணறும் பாகிஸ்தான்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 1033 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் ஆகியுள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் பெய்து வருகிறது

 பாகிஸ்தானில் கனமழை

பாகிஸ்தானில் கனமழை

பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர்.

 ஒரு நாளில் 116 பேர் பலி

ஒரு நாளில் 116 பேர் பலி

அந்த வகையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 1033 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இந்த அசுரத்தனமான மழைக்கு மத்தியில் மீட்பு பணியில் ஈடுபட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. மழை நிவாரண நடவடிக்கைகளை கூட செய்யமுடியாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

 அவசர நிலை அறிவிப்பு

அவசர நிலை அறிவிப்பு

ஒருசில இடங்களில் வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்யவும் முடியாத சூழ்நிலையும் நிலவுவதாலும் தொடர்ந்து மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாலும் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அற்விக்கப்பட்டது. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களை கட்டுப்படுத்த இத்தகைய சூழல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அழிவை விட தற்போது மிக அதிகமாக ஏற்படும் நிலைமை உள்ளது. குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் பெய்த மழை ஒரு பேரழிவை ஏற்படுத்தும் விதமாகவே தெரிகிறது' என்றார்.

 10 லட்சம் வீடுகள் சேதம்

10 லட்சம் வீடுகள் சேதம்

தொடர்ந்து தற்போதும் கனமழை பெய்து வருவதால், பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சுமார் பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. கிட்டத்தட்ட பாகிஸ்தானில் வசிக்கும் 7 பேரில் ஒருவரது வீடு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனமழையால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளது. 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பயிரிடப்பட்ட பயிர்கள் அழிந்து நாசமாகிவிட்டது. இதேபோல் மழை மற்றும் வெள்ளத்தால், 3,451 கிலோமீட்டர் சாலைகள் அழிக்கப்பட்டதாகவும், 149 பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+