கனமழைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.. 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. திணறும் பாகிஸ்தான்!
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 1033 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் ஆகியுள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் பெய்து வருகிறது

பாகிஸ்தானில் கனமழை
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர்.

ஒரு நாளில் 116 பேர் பலி
அந்த வகையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 1033 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இந்த அசுரத்தனமான மழைக்கு மத்தியில் மீட்பு பணியில் ஈடுபட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. மழை நிவாரண நடவடிக்கைகளை கூட செய்யமுடியாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அவசர நிலை அறிவிப்பு
ஒருசில இடங்களில் வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்யவும் முடியாத சூழ்நிலையும் நிலவுவதாலும் தொடர்ந்து மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாலும் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அற்விக்கப்பட்டது. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களை கட்டுப்படுத்த இத்தகைய சூழல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அழிவை விட தற்போது மிக அதிகமாக ஏற்படும் நிலைமை உள்ளது. குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் பெய்த மழை ஒரு பேரழிவை ஏற்படுத்தும் விதமாகவே தெரிகிறது' என்றார்.

10 லட்சம் வீடுகள் சேதம்
தொடர்ந்து தற்போதும் கனமழை பெய்து வருவதால், பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சுமார் பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. கிட்டத்தட்ட பாகிஸ்தானில் வசிக்கும் 7 பேரில் ஒருவரது வீடு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனமழையால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளது. 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பயிரிடப்பட்ட பயிர்கள் அழிந்து நாசமாகிவிட்டது. இதேபோல் மழை மற்றும் வெள்ளத்தால், 3,451 கிலோமீட்டர் சாலைகள் அழிக்கப்பட்டதாகவும், 149 பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications