1999ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமான கடத்தல் ஞாபகம் இருக்கா.. முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் படுகொலை
இஸ்லாமாபாத்: 1999ம் ஆண்டு நடந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தல் சம்பவத்தில், ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான ஜஹூர் இப்ராஹிம் எனப்படும் ஜமாலி பாகிஸ்தானின் கராச்சி நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளான். மார்ச் 1 ஆம் தேதி நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜஹூர் இப்ராஹிம் சுட்டுக்கொல்லப்படும் சிசிடிவி காட்சியில் முகக்கவசம் ஹெல்மெட் அணிந்துகொண்டு பைக்கில் வரும் இருவர் சுட்டுக் கொல்வது இடம்பெற்றுள்ளது. இதனால் கொலையாளிகள் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு 4 குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஜஹூர் இப்ராஹிமின் இறுதிச் சடங்கில் ஜெய்ஷ் இ முஹம்மது தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 30 போர் கைத்துப்பாக்கியை கொண்டு ஜஹூர் இப்ராஹிம் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி 5 பயங்கரவாதிகளால் 179 பயணிகளுடன் 11 விமான பணியாளர்களுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாளில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு கடத்திச் செல்லப்பட்டது. விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார், சையது உமர் ஷேக் மற்றும் முஸ்தாக் அஹ்மது சர்கார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த விமான கடத்தலின்போது ருபின் கத்யால் என்பவர் ஜஹூர் இப்ராஹிமால் பல முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். ருபின் கத்யாலுக்கு நீதிகோரி பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளான் ஜஹூர் இப்ராஹிம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications