பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி கிஷோர் பகவான் படுகொலை

பாகிஸ்தான் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிஷோர் பகவான் பாய் உட்பட ஏராளமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கராச்சியின் லந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறையில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதியன்று கிஷோர் பகவான் தப்பித்துள்ளர்.
பின்னர் 10 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி கிஷோர் பகவானை கைது செய்துவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. 10 மாதங்களாக பாகிஸ்தான் தெருக்களிலே வாழ்க்கையை நடத்தி வந்தார் கிஷோர் பகவான் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.
மேலும் கிஷோருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று லந்தி சிறை அதிகார் ஆஷிப் முனாவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லந்தி சிறையில் கிஷோர் பகவான் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் அவரது மரணம் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கிஷோரை சக கைதிகள் கொலை செய்தனரா? அல்லது அந்நாட்டு சிறை அதிகாரிகளே கொலை செய்தனரா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கெனவே இந்திய கைதி சரப்ஜித்சிங், பாகிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications