இந்தோனேசிய விமான விபத்து: 5 மூட்டைகளில் உடல் உறுப்புகள்.. 10 மூட்டைகளில் விமான பாகங்கள் கண்டெடுப்பு
ஜகார்த்தா: இந்தோனேசிய விமான விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 5 மூட்டைகளில் உடல் உறுப்புகளும் 10 மூட்டைகளில் விமான பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. தரை கட்டுப்பாட்டு நிலைய தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
மாயமான விமானம் ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் ஆகும். இந்த நிலையில் விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

மீனவர்
இந்த விமானத்தின் தகவல் பதிவு பெட்டியிலிருந்து சிக்னல் கிடைத்திருக்கிறது. ராணுவ கப்பல்கள் மூலம் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜகார்த்தா வடக்கு பகுதியில் உள்ள கடலின் அருகே சில விமான பாகங்கள் கிடப்பதாக மீனவர் ஒருவர் தகவல் கொடுத்தார்.

சில பாகங்கள்
அதன் அடிப்படையில் தேடும் பணியில் ஈடுபட்ட போது சில பாகங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விமானத்தில் 62 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தண்ணீரிலிருந்து கிழிந்த ஜீன்ஸ் , இரும்பு பாகங்கள் கிடைத்தன. சிலரது உடல் பாகங்களும் கிடைத்ததாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 5 மூட்டைகளில் உடல் உறுப்புகள் கிடைத்துள்ளன. அது போல் 10 மூட்டைகளில் விமான பாகங்கள் கிடைத்துள்ளன. கிடைத்த உடல்கள், உறுப்புகளை வைத்து இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் பயணிகளின் உறவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

கடும் மழை
இந்த விமான பாகங்கள் லகி தீவுக்கும் லான்காங் தீவுக்கும் இடையே கிடைத்தது. 28 கப்பல்கள், 5 ஹெலிகாப்டர்கள், இரு விமானங்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முத்துகுளிக்கும் வீரர்கள் கடலில் மூழ்கி ஏராளமான விமான பாகங்களை எடுத்து வருகிறார்கள். இதுவரை விமானத்தின் பதிவு எண் பிளேட், சக்கரங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. கடல் நீர் கொந்தளிப்பின்றி தெளிவாக இருப்பதால் சிதைவுகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாக உள்ளதாக கூறுகிறார்கள். விமானம் மோசமான வானிலை காரணமாகவும் புறப்பட்ட போது கடும் மழை பெய்ததாலும் விபத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

அசைப்பு
விமானத்தில் பயணித்தவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளவாசிகள் பரப்பி வருகிறார்கள். அதில் ஒரு வீடியோவில் ஒரு பெண்ணும் அவருடைய குழந்தைகளும் விமான நிலையத்தில் நடந்து சென்ற போது கையை அசைக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications