Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Iran Israel War LIVE: உச்சக்கட்ட போர் பதற்றம்.. 10ம் வகுப்பு CBSE தேர்வுகள் ரத்து!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக 6வது நாளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் உள்ள சிபிஎஸ்இபள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.

Iran Israel War

ஈரான் மீதான தாக்குதல் 6வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்ற, மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் தூதரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Mar 06, 2026, 7:14 am IST

இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்

இஸ்ரேலின் டெல் அவிவ் மத்திய பகுதியில் ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குவைத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான அலி அல் சலாம் ராணுவ விமானப் படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த பகுதியே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
Mar 05, 2026, 7:48 pm IST

லெபனானில் ஹிஸ்புல்லா ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வீரர்கள் வெளியேற அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Mar 05, 2026, 7:38 pm IST

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதால், அந்நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
Mar 05, 2026, 7:07 pm IST

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் வேண்டும் என்றே மக்கள் வசிக்கும் இடங்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதாக ஈரான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
Mar 05, 2026, 6:54 pm IST

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,230 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் உச்ச தலைவர் கமேனி உள்பட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
Mar 05, 2026, 6:47 pm IST

மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் போர் குறித்து பிரான்ஸ் அதிபருடன், நரேந்திர மோடி பேசியிருக்கிறார்
Mar 05, 2026, 1:54 pm IST

இந்தியப் பெருங்கடலில், ஈரானின் 'டேனா' போர்க்கப்பலை அமெரிக்கக் கடற்படை மூழ்கடித்தது. இதை 'கடலில் நடந்த ஒரு கொடூரம்' என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கண்டித்தார். மேலும், அமெரிக்காவுக்கு மிக மோசமான பதிலடியை கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Mar 05, 2026, 12:30 pm IST

ஜோர்டான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு இஸ்ரேலில் ட்ரோன் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட 100+ ட்ரோன்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏற்கனவே சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mar 05, 2026, 11:34 am IST

ஹார்முஸ் ஜலசந்தியில் ஞாயிற்றுக்கிழமை ஈரான் ஏவுகணையால் தாக்கப்பட்ட ஸ்கைலைட் எண்ணெய் கப்பலைச் சேர்ந்த இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Mar 05, 2026, 6:50 am IST

ஈரான் போர் விவகாரம்- டிரம்ப் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மசோதா தோல்வி

60 நாட்களுக்கு மேல் போரை தொடர நாடாளுமன்ற அனுமதியை கோரும் மசோதா தோல்வி

47-53 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா தோல்வி

இதனால் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் டிரம்ப்பால் போரை தொடர முடியும்
Mar 04, 2026, 7:23 pm IST

வளைகுடா போர் காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.92.16 என சரிந்திருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவான சரிவாகும்.
Mar 04, 2026, 5:58 pm IST

ஈரானின் 129 ட்ரோன் தாக்குதல்களில் 121 தாக்குதல்கள் அழிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர், இந்தியர்கள் உள்பட 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Mar 04, 2026, 5:42 pm IST

துருக்கியை நோக்கி ஈரான் ஏவுகணை ஏவி தாக்கிய நிலையில், நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்பு அதை அழித்துள்ளது. துருக்கி வான்பரப்புக்குள் நுழைந்த ஏவுகணையை அழித்ததாக இஸ்தான்புல் தெரிவித்துள்ளது.
Mar 04, 2026, 5:12 pm IST

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகங்களின் அவசர தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: பஹ்ரைன்: +973 39418071 ஈரான்: +98 9128109115 / +98 9128109102 / +98 9128109109 / +98 9932179359 ஈராக்: +964 771 651 1185 / +964 770444 4899 இஸ்ரேல்: +972 54 7520711 / +972 54 2428378 ஜோர்டான்: +962 770 422 276 குவைத்: +965 65501946 லெபனான்: +961 76860128 ஓமன்: +968 98282270 (WhatsApp) / 80071234 (Toll free) கத்தார்: +974 55647502 ரமல்லா, பாலஸ்தீனம்: +970 592916418 சவுதி அரேபியா (ரியாத்): +966 11 4884697 / 800 247 1234 (Toll free) சவுதி அரேபியா (ஜெத்தா): +966 126648660 / +966 12 2614093 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: +971 543090571 (WhatsApp) / 800 46342 (Toll free)
Mar 04, 2026, 4:17 pm IST

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள ‘சேப்ட்’ நகரில் அமைந்து இருக்கும் ராணுவ தளத்தை தாக்கி உள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் மல்லுக்கட்டி வருகிறது.
Mar 04, 2026, 3:04 pm IST

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இந்த போர் இந்தியாவை நெருங்கி உள்ளது. இந்திய பெருங்கடலில் வலம் வந்த அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்திய பெருங்கடலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Mar 04, 2026, 1:58 pm IST

ஈரானின் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி கடலில் மூழ்கடித்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா – இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் மூழ்கி கொண்டிருந்த ஈரானின் போர்க்கப்பலில் இருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படை காப்பாற்றி உள்ளது. பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
Mar 04, 2026, 11:28 am IST

ஈரான் போர் காரணமாக மத்தியதரைக் கடலுக்கு பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி உள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக பிரான்ஸ் தனது முதன்மை விமானம் தாங்கிக் கப்பலை மத்தியதரைக் கடலுக்கு அனுப்பி உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
Mar 04, 2026, 11:11 am IST

ஈரான் போர் காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கு ஆசியா மற்றும் அரபு நாடுகளில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கி உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகளை இந்தியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
Mar 04, 2026, 10:45 am IST

ஈரான் போர் காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கு ஆசியா மற்றும் அரபு நாடுகளில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கி உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகளை இந்தியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
Mar 04, 2026, 9:49 am IST

லெபனானின் ஹஸ்மியேயில் உள்ள ஒரு ஹோட்டலில் இஸ்ரேலிய படைகள் குண்டுவீச்சு நடத்தியுள்ளன. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
Mar 04, 2026, 9:20 am IST

ஈரானுக்கு ஆதரவளிக்கும் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் 6 பேர் பலி – 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்– லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
Mar 04, 2026, 9:06 am IST

ஆதாரம் இல்லை - ரஷ்யா

அணு ஆயுதத்தை காரணமாக வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன என்றும், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
Mar 04, 2026, 8:51 am IST

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.
Mar 04, 2026, 8:14 am IST

துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்

துபாயில் அமெரிக்க தூதரகத்திற்கு தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது
Mar 04, 2026, 6:50 am IST

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக மௌஜ்தபா கமேனி தேர்வு

மறைந்த அலி கமேனியின் 2வது மகன் தான் மௌஜ்தபா கமேனி

56 வயதான மௌஜ்தபா கமேனி தான் இனி ஈரானை வழிநடத்துவார்
Mar 04, 2026, 6:45 am IST

ஆபரேஷன் எபிக் ப்யூரி' போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து சுமார் 2,000 ஈரான் இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதில் 17 ஈரான் கடற்படை கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
Mar 03, 2026, 6:05 pm IST

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இடதுசாரிகள், விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது திருமாவளவன் பேசுகையில், ‘கமேனி கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.. அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்துவதாக” கூறினார்.
Mar 03, 2026, 5:58 pm IST

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்களை தாக்க கூடும் எனவும் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவினை எடுக்கலாம் என்று கூறிய நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. இத்தகைய எந்த ஒரு செயலும் ஈரானுக்கு எதிரான போராகவே கருதப்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
Mar 03, 2026, 5:32 pm IST

கடந்த 28 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இரு தரப்பிலும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கிறது. இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளது.
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+