Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோமா.. படுகாயம்.." உயிருக்கு போராடும் ஈரானின் புதிய சுப்ரீம் லீடர்.. அமெரிக்க உளவு துறைக்கு போன ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மேலும், அவர் கோமாவில் இருப்பதாகவும் ஈரானை ஆட்சி செய்யும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போரை ஆரம்பித்துள்ளது. இந்த மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. ஈரானில் அலி கமேனி உயிரிழந்த பிறகு அவரது மகன் மொஜ்தபா கமேனி சுப்ரீம் லீடராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், ஒரு மாதமாக அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

Iran supreme leader Health Mojtaba Khamenei Reportedly Unconscious In Qom Hospital After Injuries

மொஜ்தாபா

இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உடல்நிலை குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மொஜ்தபா கமேனி சுயநினைவின்றி இருப்பதாகவும் அவர் கோம் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இஸ்ரேல் உளவுத்துறையில் வேலை செய்வோர் தான் இந்த தகவல்களைக் கூறியதாகவுமே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

படுகாயம்

அதாவது போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் அப்போதைய சுப்ரீம் லீடரான அலி கமேனி கொல்லப்பட்டார். அலி கமேனி முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள் உடன் மீட்டிங் ஒன்றை நடத்திய நிலையில், அந்த கூட்டத்தில் தான் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கமேனி உயிரிழந்த நிலையில், மொஜ்தபாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் நாட்டை நிர்வகிக்க இயலாமல் கோமில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

கண்ட்ரோலில் இல்லை

இது தொடர்பாக உளவுத் துறை வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "மொஜ்தபா கமேனி கோமில் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. அரசு சார்ந்து எந்தவொரு முடிவுகளையும் அவர் எடுப்பதில்லை. முடிவுகளை எடுக்கும் நிலையிலும் அவர் இல்லை" என தி டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அவர் சுப்ரீம் லீடராக பதவியேற்ற பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பாகத் தெளிவான தகவல்கள் இல்லாத சூழலில், இப்போது அவரது இருப்பிடம் குறித்து முதல்முறையாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குத் தெற்கே 87 மைல் தொலைவில் உள்ள கோம் என்ற நகரில் இருக்கிறாராம். ஷியா இஸ்லாம் கொள்கைகளின்படி இது புனித நகரமாகக் கருதப்படுகிறது.. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகளுக்கு அவரது இருப்பிடம் தெரியும் என்றும் இருப்பினும் அவர்கள் பகிரங்கமாக அதை அறிவிக்கவில்லை என்றும் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பொதுவெளிக்கு வரவில்லை

மொஜ்தபா கமேனி புதிய சுப்ரீம் லீடராக பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இருப்பினும், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 56 வயதான மதகுரு மொஜ்தபாவின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் படுகாயமடைந்த மொஜ்தபா கோமாவில் இருக்கிறார் என்றும் அரசை நடத்தவில்லை என்பதுமே உளவு துறை தகவலாக உள்ளது.

இருப்பினும், ஈரான் வேறு விதமாகவே சொல்கிறது. மொஜ்கபா காயமடைந்துள்ளது உண்மை தான் என்றாலும் அவரே எல்லா பொறுப்புகளையும் கவனித்து வருவதாக ஈரான் சொல்கிறது. சமீபத்தில் தான் கமேனியின் இரண்டு அறிக்கைகள் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டன. மேலும், அவர் வார் ரூமிலும் ஆய்வு செய்ததாகக் கூறப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+