இலங்கை பாணியில் ஈராக் மதத் தலைவர் அரசியலில் இருந்து விலகல்- அரசு அரண்மனைக்குள் நுழைந்த ஆதரவாளர்கள்!
பாக்தாத்: ஈராக் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை ஏற்க மறுத்த ஆதரவாளர்கள் இலங்கை போராட்டக்காரர்கள் பாணியில் அரசு அரண்மனைக்குள் நுழைந்து நீச்சல் குளங்களில் நீராடி எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஆனால் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இதனையடுத்து ஈராக்கின் இடைக்கால பிரதமரானார் முஸ்தபா அல் காத்மி. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக அல்- சூடானி தேர்வுக்கு முக்தாதா அல் சதர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
புதிய பிரதமர் அல் சூடானிக்கு எதிராக அல் சதர் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஈராக் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டக்காரர்களை ஈராக் ராணுவம் ஒடுக்கியது. இத்தகைய போராட்டங்களால் ஈராக்கில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் முக்தாதா அல் சதர், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் பாக்தாத்தில் உள்ள Republican Palace-க்குள் அல் சதர் ஆதரவாளர்கள் நுழைந்தனர். அரண்மனையின் நீச்சல் குளம் உள்ளிட்டவைகளை அவர்கள் கைப்பற்றி வீடியோக்களை வெளியிட்டனர். இதற்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தி உள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நீச்சல் குளத்தில் நீராடி வீடியோக்களை வெளியிட்டனர். ஜனாதிபதியின் படுக்கை அறை, பாதாள அறை என அனைத்தையும் பகிரங்கப்படுத்தினர். இதனையடுத்து இலங்கையில் இருந்தே தப்பி ஓடி தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்திருக்கிறார் மாஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே. அதே பாணியில் தற்போது ஈராக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தப் போராட்டங்களை ஒடுக்க ஈராக் பாதுகாப்புப் படை தீவிரம் காட்டுகிறது. அதேநேரத்தில் அரசு தரப்புக்கும் அல் சதர் ஆதரவாளர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலான மோதல்களில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications