'விக்கி லீக்' அசாஞ்சேவிற்கு ஸ்காட்லாண்டு யார்டு பாதுகாப்புடன் ஒரு நாளைக்கு 9 லட்சம் செலவு!
லண்டன்: உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் தலையீட்டை இணையதளம் மூலமாக வெளியே கொண்டுவந்த ஜூலியன் அசாஞ்சேவிற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.அ
விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் மக்களின் சுதந்திரம் மற்றும் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் தலையீட்டை உறுதி செய்யும் ஆவணங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஜுலியன் அசாஞ்சே.

2010 ஆம் ஆண்டு ஸ்டாக் ஹோமுக்கு உரையாற்ற வந்த போது இரண்டு பெண்களை பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டிய ஸ்வீடன் அரசு, கடந்த ஆண்டு இவரை கைது செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் அசாஞ்சே வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இங்கிலாந்து நீதிமன்றம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 2012 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார்.
அதிலிருந்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் அவருக்கு பாதுகாப்பளித்து வருகின்றனர். ஏறத்தாழ 950 நாட்களுக்கும் மேலாக ஈக்வடார் தூதரகத்திலேயே அசாஞ்சே அடைந்து கிடக்கிறார்.
வெளியே வந்தால் அவரை ஸ்வீடன் அரசு கைது செய்யும் அபாயம் இருக்கிறது. அதே நேரம் அமெரிக்காவும் அவரை தண்டிப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இங்கிலாந்தின் தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் கீழ் எல்.பி.சி வானொலி மூலம் பெறப்பட்ட தகவலின் படி கடந்த அக்டோபர் 2014 ஆம் ஆண்டு வரை ஜீலியன் அசாஞ்சேவின் பாதுகாப்பிற்காக 9 மில்லியன் பவுண்ட் செலவிடப்பட்டது தெரிய வந்தது.
அதன் பிறகு கடந்த மூன்று மாதங்களை சேர்த்தால் இதுவரை 10 மில்லியன் பவுண்ட் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 10000 பவுண்ட் அதாவது தோராயமாக 9,45,222.86 ரூபாய் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications