மலேசியாவின் 'லிட்டில் இந்தியா'வில் பிரமாண்ட 'தோரண வாயிலை' திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
கோலாலம்பூர்: பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 4 நாட்கள் மலேசியா, சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்கிறார். மலேசியாவின் கோலாலம்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்ட தோரண வாயிலையும் பிரதமர் மோடி திங்கள்கிழமையன்று திறந்து வைக்க உள்ளார்.
மலேசியாவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், கோலாலம்பூர் புறநகரான லிட்டில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்ட தோரண வாயிலை திறந்து வைக்கிறார்.

இந்த லிட்டில் இந்தியா பெயருக்கேற்ப குட்டி இந்தியாவாகத்தான் இந்தியர்கள்....குறிப்பாக தமிழர்கள் பெருமளவு வாழும் பகுதியாகும். இந்த தோரண வாயில் அமைக்கும் திட்டம் 2010ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இத்தோரண வாயிலை மலேசியாவுக்கு இந்தியா அன்பளிப்பாக அளித்துள்ளது. இருநாட்டு நட்புறவின் அடையாளமாக இத்தோரண வாயில் அமையும்.
மாமன்னர் அசோகர் காலத்தில் பிரமாண்ட தோரண வாயில்கள் அமைக்கப்பட்டு அதில் புத்தம் மதம் சார்ந்த அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் சாஞ்சியில் இன்றளவும் வரலாற்று சாட்சியங்களாக இவை இருக்கின்றன.

இதே சாயலில் லிட்டில் இந்தியா தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போதி மரம், சாஞ்சி அசோக சக்கரம் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தோரண வாயிலானது புத்த மதம்- இஸ்லாமிய மதம் இரண்டின் கலைவடிவங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
இந்திய மதிப்பில் ரூ7.8 கோடியில் இந்த தோரண வாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வரும் 23-ந் தேதி திங்கள்கிழமையன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications