சுடப்பட்ட மலேசிய விமானம் அருகே பறந்த உக்ரைனின் போர் விமானம்: ரஷ்யா வெளியிடும் புது தகவல்!
மாஸ்கோ: 298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் பறந்து கொண்டிருந்த போதே அதன் அருகே உக்ரைனின் போர் விமானமும் பறந்து கொண்டிருந்தது என்று ரஷ்யா புது தகவலை வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து 298 பயணிகளுடன் மலேசியா சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் பக் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்படியே நடுவானில் அந்த விமானம் வெடித்து சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிதறி விழுந்தது.
இந்த தாக்குதலுக்கு முதலில் யார் காரணம் என்ற குழப்பம் நீடித்தது. பின்னர் கிழக்கு உக்ரைனில் இயங்கும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே காரணம் என்பது உறுதியானது. அத்துடன் ரஷ்யாவின் ஒத்துழைப்பும் கிளர்ச்சியாளர்களுக்கு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதை மறுத்துள்ளது ரஷ்யா. இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் ரஷ்யா ராணுவ தாளபதி இகோர் முகுசேவ் கூறியதாவது:

உக்ரைன் போர் விமானம்
மலேசிய பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்த அந்த வான்பரப்பில் 3 அல்லது 4 கிலோ மீட்டர் சுற்றளவில்தான் உக்ரைனின் எஸ் யூ-25 போர் விமானமும் பறந்து கொண்டிருந்தது.

ஆயுதம் வழங்கவில்லை..
உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுதம் வழங்கவில்லை. அதேபோல் 11 பக் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குவதற்கான பயிற்சியையும் போராளுக்கு ரஷ்யா வழங்கவில்லை.

ஆதாரம் இருக்கிறதா?
அமெரிக்கா தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறுகிறது. அப்படி ஆதாரம் இருந்தால் உரிய செயற்கைக் கோள் படங்களுடன் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

உக்ரைன் தான் பக் ஏவுகணைகளை நிறுத்தியது
உண்மையில் சம்பவ நாளில் உக்ரைன்தான் பக்-எம்1 ஏவுகணைகளை டொனெஸ்ட்ஸ்க் நகரில் நிறுத்தியது. இவ்வாறு ரஷ்யா ராணுவ தளபதி கூறினார்.

உக்ரைன் மறுப்பு
ஆனால் உக்ரைன் அதிபர் பீட்ரோ போரொஷென்கோ, ரஷ்யா சொல்வதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மலேசிய விமானம் பறந்த போது உக்ரைனின் போர் விமானம் எதுவும் பறக்கவில்லை என்கிறார்.

எந்த விமானமும் பறக்கலையே..
உக்ரைனின் எந்த ஒரு விமானம் அந்த நேரத்தில் வானில் பறக்கவே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தும் ஆதரவு.
இங்கிலாந்து பிரதமர் கேமரூம் கூட, உக்ரைனிடம் அப்படியான ஏவுகணைகள் எதுவும் இல்லை என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications