திருப்பி அடிக்க தொடங்கிய ஆப்கன் ராணுவம்.. இரண்டே நாட்களில் 572 தாலிபான்கள் பலி.. திடீர் திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஷெபர்கன் நகரில் பதுங்கியிருந்த தாலிபான்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    அடுத்தடுத்து 2 முக்கிய நகரங்களை கைப்பற்றிய Taliban.. ஆப்கனில் உச்சக்கட்ட பதற்றம்

    கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அமெரிக்கப் படைகள் மெல்ல வெளியேறத் தொடங்கியுள்ளது, இன்னும் சில வாரங்களில் அமெரிக்கப் படைகள் மொத்தமாக வெளியேறிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய மறுகணமே ஆப்கன் ராணுவம் மீது தாலிபான்கள், தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.

    தாலிபான்கள்

    அமெரிக்கப் படைகள் வெளியைத் தொடங்கியதும் தாலிபான்கள் தாக்குதல் நடத்துவார்கள் எனத் தெரிந்தாலும், அவர்கள் இவ்வளவு வலுவாக இருப்பார்கள் என்பதை ஆப்கன் ராணுவம் கணிக்கத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் வெறும் சில வாரங்களில் ஆப்கன் நாட்டில் சுமார் 80% பகுதிகளைத் தாலிபான்களால் கைப்பற்ற முடிந்தது. அதிலும், பல இடங்களில் ஆப்கன் ராணுவம் எவ்வித போராட்டமும் இல்லாமல் சரணடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது

    பதில் தாக்குதல்

    பதில் தாக்குதல்

    இதனால் இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் ஆப்கனில் தற்போதுள்ள அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் தலைமையில் அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையை சுதாரகரித்துக் கொண்ட ஆப்கன் ராணுவமும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. சில பகுதிகளை தாலிபான்களிடம் இருந்து ஆப்கன் ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    500க்கும் மேற்பட்ட தாலிபான்கள் பலி

    500க்கும் மேற்பட்ட தாலிபான்கள் பலி

    இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தானில் ஷெபர்கன் நகரில் பதுங்கியிருந்த தாலிபான்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் பாதுகாப்புத் துறை அதிகாரி ஃபவாத் அமான் ட்வீட் செய்துள்ளார். இப்படி பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மொத்தம் 572 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-காய்தா பயங்கரவாதிகள்

    பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-காய்தா பயங்கரவாதிகள்

    அதேபோல ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பாகிஸ்தானியர்கள் உட்படக் குறைந்தது 45 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, லஷ்கர் காவின் புறநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதேபோல அல்-காய்தாவுடன் தொடர்புடைய 30 பாகிஸ்தானியர்கள் உட்பட 112 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய பகுதிகளை கைப்பற்றும் தாலிபான்கள்

    புதிய பகுதிகளை கைப்பற்றும் தாலிபான்கள்

    ஆனால் மறுபுறம் தாலிபான்களில் தாக்குதலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. முதலில் எல்லபைபகுதிகளையும் ஊரக பகுதிகளையும் கைப்பற்றி வந்த தாலிபான்கள், இப்போது நகரங்களை நோக்கித் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகர் ஜராஞ்ச்சை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஜவ்ஜானில் உள்ள ஷெபர்கன் நகரத்தைக் கைப்பற்றினர். இந்நிலையில், இப்போது வடக்கில் குண்டுஸ் மற்றும் சார்-இ-புல் ஆகிய நகரங்களையும் தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது தாலிபான்களுக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் உள்ளது. முன்னதாக, ஆப்கானில் தற்போதுள்ள அஸ்ரப் கானி அரசு நீக்கப்படும் வரை அமைதி திரும்ப வாய்ப்பே இல்லை எனத் தாலிபான்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+