சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது... மோடிக்கு பாக். பிரதமர் நவாஷ் ஷெரீப் கடிதம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுக்கும் விதமாக ‘இருதரப்பு பிராந்திய உறவுகள் குறித்து பரிமாறிக் கொண்ட கருத்துக்களால் சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக' மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடிதம் எழுதியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த மோடி கடந்த மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அந்த பதவியேற்பு விழாவுக்கு முதன்முறையாக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை அதிபர், பாகிஸ்தான் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக சார்க் நாட்டு தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் மோடி. பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பின் போது இரு நாட்டு உறவு குறித்து பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து மோடி, நவாஷ் ஷெரீப் தாயாருக்கு சால்வை ஒன்றை பரிசு வழங்கினார். அதை நவாசும் அவரது தாயாரிடம் வழங்கிய செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியானது. இதைதொடரந்து மோடியின் தாயாருக்கும் நவாஷ் ஷெரீப், பரிசு ஒன்றை கொடுத்து அனுப்பி இருந்தார்.
இதற்கிடையே, நவாப் ஷெரீப்பின் இந்தியப் பயணம் திருப்திகரமானதாக அமையவில்லை என பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுக்கும் விதமாக, மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார் நவாஸ் ஷெரீப். அதில், தனது இந்தியப் பயணம் திருப்திகரமானதாக அமைந்ததாக விளக்கமளித்துள்ளார் நவாஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் தூதரகம் மூலமாக பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதத்தில், ‘இரு தரப்பு பிராந்திய உறவுகள் குறித்து நாமிருவரும் பரிமாறிக்கொண்ட கருத்துக்களால் மிகவும் திருப்தியடைந்து தான் தாய்நாடு திரும்பினேன்" என தெளிவுபட நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications