Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைதிக்கான நோபல் பரிசு: கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய 2 பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு 2 பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா பேச்சுரிமைக்காக வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக் ஹோம்: பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4-ம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தன்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக்குக்கு அவருடைய வாழ்வுக்குப் பிறகு (after lives) நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. சமரசமில்லாமல் காலணித்துவத்தின் விளைவுகள், வளைகுடா பகுதிகளின் அகதிகளின் தலைவிதிகள் போன்ற உணர்வுகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.

Nobel peace Prize 2021 announcement Philippines journalist Maria Ressa, and Russian journalist Dmitry Muratov win

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நோபர் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர். புலனாய்வு இதழியலுக்கான டிஜிட்டல் மீடியா நிறுவனம் மூலம் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான திமித்ரி மொரொட்டா பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர். பல சவாலான சூழ்நிலைகளிலும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுந்ததிரத்துக்கு பக்க பலமாக இருந்தவர். 1993 ஆம் ஆண்டில், அவர் நோவாஜா கெஜெட்டா என்ற சுதந்திர செய்தித்தாளின் (independent newspaper) நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பசியை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்கள் நிறைந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட பங்களித்ததற்காகவும், பசியை ஆயுதமாக பயன்படுத்தி போர்களையும், மோதல்களையும் உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தடுக்க முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காகவும் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+