மகாத்மா காந்தியின் வழியை பின்பற்றுங்கள்: அல் கொய்தாவினருக்கு உத்தரவிட்ட ஒசாமா
லண்டன்: அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் 1993ம் ஆண்டு தீவிரவாதிகள் மத்தியில் பேசுகையில் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி
பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.
2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தீவிரவாதிகளை குறிவைத்ததும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கந்தஹாரில் இருந்து தப்பியோடினார். ஆப்கானிஸ்தானில் இருந்த அல் கொய்தா தீவிரவாதிகள் பலர் அவசர, அவசரமாக தங்கள் இருப்பிடங்களை காலி செய்துவிட்டு ஓடினர்.

அப்போது அவர்கள் இருந்த இடம் ஒன்றில் இருந்து 1,500 கேசட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கேசட்டுகள் பல கைகள் மாறி சிஎன்என் கேமராமேனுக்கு கிடைத்தது. இதையடுத்து மசாசுசெட்ஸில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் ஆப்கான் ஊடக ப்ராஜெக்ட் செய்த பிளாக் மில்லருக்கு அந்த கேசட்டுகள் கிடைத்தன. அவர் ஆப்கானிஸ்தான் பற்றி எழுதிய புத்தகத்தில் அந்த கேசட்டுகளில் உள்ள பேச்சுகள் பற்றி எழுதியுள்ளார்.
1960களில் இருந்து 2001ம் ஆண்டு வரை ஒசாமா உள்ளிட்ட பலர் பேசிய பேச்சுகள் அந்த கேசட்டுகளில் இருந்தன. ஒசாமா முதன்முதலாக 1987ம் ஆண்டு பேசியுள்ளார்.
1993ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கேசட்டில் ஒசாமா தீவிரவாதிகளிடம் கூறுகையில்,
அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணியுங்கள். இந்துவான மகாத்மா காந்தி வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கும் போரை துவங்கிய பிறகு இங்கிலாந்து தனது மாபெரும் காலனியில் இருந்து வெளியேறியது என்றார்.
ஒரு கேசட்டில் ஒபாமா நியூயார்க்கின் பெயரை குறிப்பிடாமல் தாக்குதல் நடத்தப் போகும் நம் சகோதரர்களுக்கு ஆண்டவன் வெற்றி அளிப்பானாக என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications