பாகிஸ்தானில் டாங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 123 பேர் பலி
பாகிஸ்தானின் பஹவல்பூரில் எண்ணெய் ஏற்றிக் கொண்டுச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்ட வண்டியிலிருந்து கசிந்த எரிபொருளை எடுக்கச் சென்ற பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன; காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில், தீயணைப்பு விரர்கள் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.
அதிகப்படியான வேகத்தில் சென்றதால் லாரி கவிழ்ந்து, பின்னர் தீப்பிடித்து எரிந்தது என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் சிலர் புகைபிடித்துக் கொண்டிருந்ததால் லாரியில் நெருப்பு பற்றியிருக்கலாம் என நேரில் கண்டவர்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கள் எழுந்துள்ளன.
பிபிசியின் பிற செய்திகள்:
தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப்
மனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்!













Click it and Unblock the Notifications