அதிகரிக்கும் பலாத்கார சம்பவங்களால் அவசரநிலை அமல்.. பாகிஸ்தான் பஞ்சாப் மகாண அரசின் பகீர் முடிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மகாணத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ‛அவசரநிலை' பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மகாண முதல்அமைச்சராக ஷம்சா ஷாபாஸ் உள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியை சேர்ந்த இவர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மகன் ஆவார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியை இழந்த பிறகு ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆன நிலையில் பஞ்சாப் மகாணத்திலும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து ஷம்சா ஷாபாஸ் முதல்வராக உள்ளார்.

பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் தான் பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் தினசரி பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆளும் அரசுக்கு இது பிரச்சனையாக உள்ளது. இந்த குற்றத்தை குறைக்க கைது நடவடிக்கை எடுத்தாலும் கூட தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது மக்களையும், ஆட்சியாளர்களையும் கவலையட செய்துள்ளது.

அவசரநிலை அமல்படுத்த முடிவு
இந்நிலையில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கட்டுப்படுத்த அவசரநிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி பஞ்சாப் உள்துறை மந்திரி அட்டா தரார் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது:

தினமும் 4 முதல் 5 வழக்குகள்
பஞ்சாப் மாகாணத்தில் தினமும் நான்கு முதல் ஐந்து பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதை கட்டுப்படுத்துவது அவசியம். இதுபோன்ற குற்றங்களை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக மகளிர் உரிமைக்கான அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து காவலில் வைத்துள்ளோம். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பது சமூகம் மற்றும் அரசுக்கு கடும் பிரச்சனையாக உள்ளது.

2 வாரத்தில் அவசர நிலை
பாலியல் வன்கொடுமைக்கான எதிர்ப்பு பிரச்சாரத்தை அரசு துவங்கி உள்ளது. பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து எச்சரிக்கப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. இன்னும் 2 வாரங்களில் அவசரநிலை அமல்படுத்தப்படும்'' என்றார்.

குற்றங்கள் அதிகரிப்பு
உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2021 தரவரிசையின்படி, 156 நாடுகளில் பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது. பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுதல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகள் ஆகியவையும் பாகிஸ்தானில் பரவலாக அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாகும். 2018ல் பாகிஸ்தானில் 5,048 பெண்களுக்கு பணியிட துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019ல் 4,751 வழக்குகளும் 2020ல் 4,276 வழக்குகளும், மற்றும் 2021 இல் 2,078 வழக்குகள் பதிவாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications