பாகிஸ்தானின் குறுகிய தூரம் பாய்ந்து சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: குறுகிய தூரம் பாய்ந்து சென்று தாக்கும் நவீன ஏவுகணையை, பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் நீண்ட மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று சுமார் 60 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கும் இலகுரக ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததற்காக பாகிஸ்தான் விஞ்ஞானிகளைப் பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ராணுவ தளபதி கயானி.












Click it and Unblock the Notifications