யுத்த நிறுத்தம் முறிந்தது- இஸ்ரேலின் வெறியாட்டம் உச்சகட்டம்.. பலி எண்ணிக்கை 1,032
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை வெறியாட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 1,032 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மூவரை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை படுகொலை செய்தது.
ஆனாலும் ஆத்திரம் தீராத இஸ்ரேல், காஸா பகுதி மீது கொடூரமான வான்வழித் தாக்குதல்களை கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறது. அத்துடன் காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

1,032 பேர் பலி
இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 1,032 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் படுகாயமடைந்துள்ளனர்.

2 லட்சம் பேர் அகதிகள்
மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த மண்ணில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே ரமலான் நோன்பை முன்னிட்டு 12 மணி நேர யுத்த நிறுத்தம் கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

யுத்த நிறுத்தத்தை முறித்த இஸ்ரேல்
ஆனால் யுத்த நிறுத்தத்தை சில மணி நேரம் மட்டுமே கடைபிடித்த இஸ்ரேல் மீண்டும் வெறியாட்டத்தைத் தொடங்கியது. இத்தாக்குதல்களில் கொத்து கொத்தாக அப்பாவி பொதுமக்களும் பிஞ்சு குழந்தைகளும் பலியாகினர்.

பாலஸ்தீன அரசு தகவல்
இது குறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1032 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருப்பதை உறுதி செய்துள்ளது.

42 இஸ்ரேல் வீரர்கள் பலி
இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு எதிராக காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் 43 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications