மலாலாவின் நோபல் பரிசுக்கு தாலிபான் பேய்கள் பதிலாய் தந்த துப்பாக்கி தோட்டாக்கள்!
பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் மீதான தாலிபான் தாக்குதலுக்கான காரணங்களில் மலாலாவிற்கு கிடைத்த நோபல் பரிசிற்கு பழிவாங்கும் நடவடிக்கையும் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பெஷாவர் நகரில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளின் மீதான தாலிபான்களின் கொலை வெறி தாக்குதலுக்கு இளம் சமூக ஆர்வலரான மலாலா யூசுப் சாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலாலா யூசும் சாய்... பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடிய "குற்றத்திற்காக" கடந்த 2012 ஆம் வருடம் அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது தாலிபான் தீவிரவாதியால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு மீண்டு வந்தவர்.
நேற்று நடைபெற்றுள்ள பெஷாவர் பள்ளிக் குழந்தைகள் மீதான தீவிரவாதத் தாக்குதலே மலாலாவிற்கு அமைதிக்காக வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு விழாவிற்கு பழிவாங்கும் சம்பவம்தான் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
அகமது ரசீத் என்ற ராணுவ அதிகாரி இதுகுறித்து தெரிவித்த போது, "பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்ற இத்தாக்குதலில், ஒரு காரணமாக விளங்குவது மலாலவிற்கு கிடைத்த நோபர் பரிசும்தான்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள மலாலா, "என்னுடைய இதயத்தையே நொறுங்கச் செய்யும் அளவிற்கு இந்த சம்பவம் என்னை உலுக்கி உள்ளது. இது ரத்தத்தினை உறையச் செய்யும் ஒரு கொடுமையான சம்பவம் ஆகும்.
அப்பாவியான குழந்தைகளுக்கான பள்ளிக் கூடம் வன்முறையைக் காட்டுவதற்கான இடமல்ல. இந்த படுபாதகச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையான சட்டத்தினை அரசு அளிக்க வேண்டும்.
நானும், உலக அளவில் பல லட்சக் கணக்கான மக்களும், படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளுக்காகவும், சகோதர, சகோதரிகளுக்காகவும் வருத்தம் தெரிவிக்கின்றோம். ஆனால், எங்களை என்றுமே வீழ்த்த முடியாது" என்று வருத்தம் தொனிக்க தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications