வேக்சின் போடாதவர்கள் குறி! ரெடியாகும் தனி லிஸ்ட்.. அடுத்து அரெஸ்ட் தான்! அதிரடியில் இறங்கிய அதிபர்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாடு வேக்சின் செலுத்த மறுப்பவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து தனியாக லிஸ்ட் ஒன்றும் தயாராகி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனாவை எதிர்கொள்ளத் திணறி வருகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், ஆல்பா, டெல்டா, பீட்டா கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின.

கொரோனா
இப்போது ஓமிக்ரான் பரவல் உலக நாடுகளை அலறவிட்டு வருகிறது. தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்கும் கொரோனா ஏற்படும் என்றாலும் கூட, உயிரிழப்புகளும் மிகப் பெரியளவில் குறைந்துள்ளது. இதனால் உலகின் பல நாடுகளும் வேக்சின் பணிகளிலேயே தீவிர முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.

பிலிபைன்ஸ்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிபைன்ஸ் நாட்டில் வேக்சின் பணிகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே தீவிர வேக்சின் ஆதரவாளராக அறியப்படுகிறார். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேக்சின் செலுத்த விரும்பாத நபர்கள் பிலிபைன்ஸ் நாட்டில் இருக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்றும் அந்நாட்டின் அதிபர் அறிவித்திருந்தார்.

கட்டுப்பாடுகள்
அதேபோல அங்கு வேக்சின் போடாத மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அங்கு வேக்சின் போடாத மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், அந்நாட்டின் அதிபர் இதற்கு பின்வாங்குவதாகத் தெரியவில்லை. இப்போது அடுத்த லெவலுக்கு சென்று வேக்சின் போடாத மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி, தேவையில்லாமல் வெளியே போகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரெடியாகும் லிஸ்ட்
அரசின் இந்த உத்தரவைப் பின்பற்றாமல் வேக்சின் போடாமல் வெளியே சுற்றும் நபர்களைக் கைது செய்யவும் அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அறிவித்துள்ளார். பிலிபைன்ஸ் நாட்டில் உள்ள மக்களின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அங்குள்ள கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அங்குள்ளவர்கள் வேக்சின் போட்டுள்ளனரா என்று லிஸ்ட் தயாரிக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்து அரெஸ்ட்
விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த உத்தரவின்படி, இனி சுகாதார அதிகாரிகள் அங்குள்ள 42,046 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று லிஸ்ட் எடுக்க வேண்டும். அந்த லிஸ்டில் உள்ள வேக்சின் போடாதவர் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தேவையின்றி வெளியே சுற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைக் கைது செய்யவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டின் குற்றவியல் சட்டத்திலும் தேவையான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா
ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர், பிலிபைன்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கு ஒரே நாளில் சுமார் 34,021 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாசிட்டிவ் விகிதமும் 47.9%ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 53,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த 2020 இதே அதிபர் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, வேக்சின் போடாதவர்களைச் சுட்டுத்தள்ளுவேன் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications